கனமான இதயம் கவிதை படிக்குது,
காரணம் அறியாது பரித்தவிக்குது,
காணாமல் எதையோ எதிர்பாக்குது,
விலகிடும் அன்பு உருகுலைக்குது,
அளவெடுத்த வார்த்தையில் அறுத்தெறிக்குது,
ஆடிய மனமிங்கு அழுது வடியுது,
மதியாத அன்பு இப்போ மதிப்பாகுது,
இழந்தபின்பே ஞானம் பிறக்குது....
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment