நிலவு காணாமல் ஏங்கும் மனதுடன்
நீண்ட இரவொன்று..
நினைவில் நீண்ட கனவொன்று
விடியும் வரை தொடர்கிறது..
விட்டுவிட்டு அவள் நினைவு
தூவானமாய் விடுவதாய் இல்லை..
விழிகளில் வினவிய காதல்கணைகள்
கபரிதம் செய்கிறது சுயநினைவுகளை..
சுட்டும் சுடாத வெப்ப சலனம்
வியவையாய் தேகத்தில் சிலிர்கிறது..
உயிருடன் உறவாடும் நேரங்களில்
வார்த்தைகள் மௌனமாகின்றது ..
உணர்வின் உந்துதல் காதல்
நம்பிக்கையின் நரம்பியல் செயல்பாடு..
கனவொன்றும் பொய்க்கவில்லை
விடியலுக்கு முன்அவள் கைபேசியில் முத்தங்கள்
அவள் நினைவுகளோடு உறங்கிபோனேன்....
நீண்ட இரவொன்று..
நினைவில் நீண்ட கனவொன்று
விடியும் வரை தொடர்கிறது..
விட்டுவிட்டு அவள் நினைவு
தூவானமாய் விடுவதாய் இல்லை..
விழிகளில் வினவிய காதல்கணைகள்
கபரிதம் செய்கிறது சுயநினைவுகளை..
சுட்டும் சுடாத வெப்ப சலனம்
வியவையாய் தேகத்தில் சிலிர்கிறது..
உயிருடன் உறவாடும் நேரங்களில்
வார்த்தைகள் மௌனமாகின்றது ..
உணர்வின் உந்துதல் காதல்
நம்பிக்கையின் நரம்பியல் செயல்பாடு..
கனவொன்றும் பொய்க்கவில்லை
விடியலுக்கு முன்அவள் கைபேசியில் முத்தங்கள்
அவள் நினைவுகளோடு உறங்கிபோனேன்....
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment