Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Thursday, October 30, 2014
Wednesday, October 29, 2014
Tuesday, October 28, 2014
ஏனோ வாழவும் துடிக்கின்றது .....
இமைகள் மூட மறுகின்றது
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும் விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய் கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா
இதயம் துடியா துடிக்கின்றது
எண்ணங்கள் தீயாய் எரிக்கின்றது
உடலில் பலவீன குடிக்கொள்கிறது
வேற்று சிந்தனை அற்றுப்போனது
வேதனை வேள்வி நடத்துக்கின்றது
வெறுமையாய் வாழ்க்கை தெரிகிறது
வேற்றுலகம் போய்விட துடிக்கின்றது
ஏனோ!
வாழ்க்கையை வாழவும் விழைகின்றது ..
தன்னம்பிக்கையை துணையாய் கொண்டு .......
- கவிதை பூக்கள் பாலா
Saturday, October 25, 2014
ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும்.........
ஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே ! . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......
யார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப
சூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......
அடுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே !...
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........
பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால் அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும் அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .
இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............
பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......
தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......
இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.
ஆபாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்
அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......
நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......
பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமாய் பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா
ஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே !... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........
பெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால் அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும் அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .
இதுவே ! ஆண்களுக்கும் பொருந்தும் ............
பெண்ணியம் என்பதும் பெண் விடுதலை என்ன என்பதும், பெண் சுதந்திரம் எது என்பதும் இன்றைய பெண்களிடமே ஒருமித்த கருத்து இல்லை.....
கருத்து விவாதங்கள் வரவேற்கலாம் ......
தனி மனித சுதந்திரதிற்குள் சென்று தாக்குதல் நடத்துவது தவறு , மனித உரிமைமீறல் ஆகும்..... இது ஆணாக இருக்கும் பச்சத்தில் உடை சம்பந்தமான தாக்குதல் வந்திருக்குமா ? ....... விவாததிற்க்குரியதே!......
இன்று தாக்குதலுக்கும், வன்புணர்ச்சி, வன்கொடுமை இப்படி பாதிக்கப்படும் பெண்கள் பெருபான்மையானவர்கள் (ஒரு சில தவிர ) தைரியம் இல்ல முழுதாக மூடி இருக்கும் பள்ளி சிறுமிகளும், மனநலம் பதிக்கப் பட்டவர்கள், எதிர்க்க முடியா பலகீனமானவர்கள் தான் அவர்கள் இலக்ககாகின்றனர்.
ஆபாசத்தை அருவருப்பை எதிர்க்க நினைபவர்கள் முதலில் நம் இல்லங்களுக்குள் புகுந்துவிட்ட டெலி சாப்பிங் என்ற பெயரில் நடக்கும் வியாபார விளம்பரங்களை எதிர்ப்போம் ........ அனைவரும் கைக்கோர்ப்போம்
அடிமைப் பட்டுகிடநத பெண்ணினம் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் சமூக சூழல் கல்வியால் சுய மரியாதையோடு கட்டுகளை உடைத்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருக்கும் காலம் ......... மாற்றங்கள் நிகழும்போதெல்லாம்
சில சகிப்பு தன்மைகள் தேவைப்படுகின்றது ......
நம் தாய், சகோதரியும், சக தோழிகள் என்ற பெண்ணினத்தோடே வாழ்க்கை பயணிக்கின்றோம் .......
பெண்களும் ஆண்களை எதிரியாய் எண்ணாமல் நாகரீகமாய் பயணிப்போம்..
- கவிதை பூக்கள் பாலா
Friday, October 24, 2014
மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் ....
அன்பின் உறவாள் சுமக்கும் கருவிலும்
இனம் காணா ஒளி பரவட்டும் .......
குழந்தையின் அடையாள பெயரிலும்
அந்நியன் வார்த்தை சூட்டி தமிழை இகழா ஒளி பரவட்டும் .......
அழகையும் ஆடம்பரதையும் உட்கொண்டு சிசுவின்
உயிமையான தாய்ப்பால் மறுக்கா ஒளி பரவட்டும் .......
கல்வியைச் சுமையாக்கி குழந்தையை
பொதிச்சுமக்கும் விலங்காக்கிடா ஒளி பரவட்டும் .......
தாய்மொழி மறத்திட்டு, அந்நியன் மொழித் திணித்து
ஆராதிக்கும் மனப்பாங்கை மாற்றும் ஒளி பரவட்டும் .......
சிந்தனையை முடமாக்கி, புத்தகத்தை பிரதி எடுக்கும்
கல்விமுறை மாற்றத்தை நோக்கி ஒளி பரவட்டும் .......
பருவத்தின் மாற்றங்கள் உண்டாக்கும் பாலின ஈர்ப்புகளை,
காதலென்று நினைக்கா பாலியல் கல்வி ஒளி பரவட்டும் .......
முதலாளிகளின் கூலிகளாக்கும் கல்விமுறையை
தூக்கியெரியும் சமூக விழிப்பு ஒளி பரவட்டும் .......
அன்பின் ஆழமறிந்து, காமம் எல்லையுணர்ந்து
வாழ்க்கை முறையறிந்து வாழும் ஒளி பரவட்டும் .......
குடும்ப உறவுகளுக்குள், சமூக நலன்களுக்குள்
நாட்டின் பற்றின் மேல் ஒளி பரவட்டும் .......
இன மதங்களின் வன்மங்கள் குறைய
ஒரே கடவுள், அது அன்பே ! என்ற ஒளி பரவட்டும் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாக எண்ணா ஒளி பரவட்டும் .......
மனித மாண்புகளை மதிக்கும்
இரக்கம் இதயத்தில் மலர ஒளி பரவட்டும் .......
தீவிரவாதத்தை திராணி இல்லாமலாக்கும்
அகிம்சை என்னும் ஒளி பரவட்டும் .......
எழுத்துக்களில் துணிவு, கருத்தில் தெளிவு ,
புரிதலோடு விவாதம் செய்யும் ஒளி பரவட்டும் .......
தமிழில் பிழையின்றி, இலக்கண நன்கறிந்து ,
தமிழின் அழகறிந்து, படைப்புகளை எழுதும்
தமிழ்பேரரிஞ்சர்களின் புகழ் ஒளி பரவட்டும் .......
பேச்சு தமிழில் ஆர்வ கோளாரில் அரைகுறையாய் கிறுக்கும்
என்போன்றோருக்கு அறிவு வளர ஒளி பரவட்டும் .......
தமிழை முறையாய் இலக்கண மரபு
பயின்று மரபுக் கவிதை எழுதி , சான்றோரின் பரிசீலனைக்கு
பிறகு அச்சு பூக்களை தொடுத்து மாலையாக்கி
தமிழன்னைக்கு மாலைச் சூட புத்தக வடிவிலே வடித்தெடுத்து
உங்களின் எண்ண விழிகள் வியக்கும் வண்ணம்
வார்த்தை வார்த்தெடுக்கப் பட்டு,
மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் .......என்னும்
தன் இரண்டாம் படைப்பாய்
தோழி. கவிஞர் நளினி முத்து
தமிழன்னைக்கு படைத்திருக்கிறார்.
விரைவில் உங்கள் பார்வைக்கு,
உங்கள் பேராதரவை எதிர்நோக்கி..........
உங்கள் ஆதரவு வரவேற்பு ஒலி பரவட்டும் .......
- நட்புடன் கவிதை பூக்கள் பாலா
ஒளி பரவட்டும் புத்தக வெளியீடு விரைவில் என்ற ஒலி பரவட்டும்
இனம் காணா ஒளி பரவட்டும் .......
குழந்தையின் அடையாள பெயரிலும்
அந்நியன் வார்த்தை சூட்டி தமிழை இகழா ஒளி பரவட்டும் .......
அழகையும் ஆடம்பரதையும் உட்கொண்டு சிசுவின்
உயிமையான தாய்ப்பால் மறுக்கா ஒளி பரவட்டும் .......
கல்வியைச் சுமையாக்கி குழந்தையை
பொதிச்சுமக்கும் விலங்காக்கிடா ஒளி பரவட்டும் .......
தாய்மொழி மறத்திட்டு, அந்நியன் மொழித் திணித்து
ஆராதிக்கும் மனப்பாங்கை மாற்றும் ஒளி பரவட்டும் .......
சிந்தனையை முடமாக்கி, புத்தகத்தை பிரதி எடுக்கும்
கல்விமுறை மாற்றத்தை நோக்கி ஒளி பரவட்டும் .......
பருவத்தின் மாற்றங்கள் உண்டாக்கும் பாலின ஈர்ப்புகளை,
காதலென்று நினைக்கா பாலியல் கல்வி ஒளி பரவட்டும் .......
முதலாளிகளின் கூலிகளாக்கும் கல்விமுறையை
தூக்கியெரியும் சமூக விழிப்பு ஒளி பரவட்டும் .......
அன்பின் ஆழமறிந்து, காமம் எல்லையுணர்ந்து
வாழ்க்கை முறையறிந்து வாழும் ஒளி பரவட்டும் .......
குடும்ப உறவுகளுக்குள், சமூக நலன்களுக்குள்
நாட்டின் பற்றின் மேல் ஒளி பரவட்டும் .......
இன மதங்களின் வன்மங்கள் குறைய
ஒரே கடவுள், அது அன்பே ! என்ற ஒளி பரவட்டும் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாக எண்ணா ஒளி பரவட்டும் .......
மனித மாண்புகளை மதிக்கும்
இரக்கம் இதயத்தில் மலர ஒளி பரவட்டும் .......
தீவிரவாதத்தை திராணி இல்லாமலாக்கும்
அகிம்சை என்னும் ஒளி பரவட்டும் .......
எழுத்துக்களில் துணிவு, கருத்தில் தெளிவு ,
புரிதலோடு விவாதம் செய்யும் ஒளி பரவட்டும் .......
தமிழில் பிழையின்றி, இலக்கண நன்கறிந்து ,
தமிழின் அழகறிந்து, படைப்புகளை எழுதும்
தமிழ்பேரரிஞ்சர்களின் புகழ் ஒளி பரவட்டும் .......
பேச்சு தமிழில் ஆர்வ கோளாரில் அரைகுறையாய் கிறுக்கும்
என்போன்றோருக்கு அறிவு வளர ஒளி பரவட்டும் .......
தமிழை முறையாய் இலக்கண மரபு
பயின்று மரபுக் கவிதை எழுதி , சான்றோரின் பரிசீலனைக்கு
பிறகு அச்சு பூக்களை தொடுத்து மாலையாக்கி
தமிழன்னைக்கு மாலைச் சூட புத்தக வடிவிலே வடித்தெடுத்து
உங்களின் எண்ண விழிகள் வியக்கும் வண்ணம்
வார்த்தை வார்த்தெடுக்கப் பட்டு,
மரபுக் கவிதைகளாய் ஒளி பரவட்டும் .......என்னும்
தன் இரண்டாம் படைப்பாய்
தோழி. கவிஞர் நளினி முத்து
தமிழன்னைக்கு படைத்திருக்கிறார்.
விரைவில் உங்கள் பார்வைக்கு,
உங்கள் பேராதரவை எதிர்நோக்கி..........
உங்கள் ஆதரவு வரவேற்பு ஒலி பரவட்டும் .......
- நட்புடன் கவிதை பூக்கள் பாலா
ஒளி பரவட்டும் புத்தக வெளியீடு விரைவில் என்ற ஒலி பரவட்டும்
Monday, October 13, 2014
Sunday, October 12, 2014
Saturday, October 11, 2014
Subscribe to:
Posts (Atom)