என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 24, 2015

கூறுபோடும் ஈனபிறவிகளே

மின்மினி பூச்சிகளாய்
வெள்ள அறிக்கைகள் வெற்றுகூப்பாடுகள்,
ஊசலாடும் உயிரையும் உதாசினபடுத்திய
உயர்அதிகார மமதை வர்க்கங்களே...
மின்னாத ஏழ்மையின் வாழ்க்கை இன்றும்,
மெழுகுவர்த்தி துணையோடு
மெழுகாய் கரைகின்றதே...
கரம்கொடுக்கும் கரங்களுக்கு
கறைப்படுத்தி நீ முகம் காட்டுகிறாய்,
போலியான உன்வேஷம்
மழை வெளுத்துகாட்டியதே....
நீலிக்கண்ணீரும் காட்சிகளும்,
பொய்ஆடையின்றி நிர்வாணமாய்
அரங்கேற்றியதும் மழைவெள்ளமே...
குதறிப்போட்ட எங்கள் வாழ்க்கையை
கூறுபோடும் ஈனபிறவிகளே,
ஈமசடங்கிலும் ஈக்களாய்
மொய்க்கின்றாயே இனிப்பைதேடி...
விடியுமோ வாழ்க்கை என்றே
ஏக்கத்திலேயே ஏமாற்றமாய் ,
எரிமலையாய் எரிகிறதே
வயிறும், நினைவுகளும்....
- கவிதை பூக்கள் பாலா
LikeComment

No comments:

Post a Comment