என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, August 19, 2011

தோழி சசிகலாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்




பிறந்தநாள் , பிறந்தநாள்,
என் தோழிக்கு பிறந்த நாள்
வின்னவளை வீழ்த்தி விட்டு
மண்ணுலகம் வந்த நாள் ,
தெவிட்டாத அன்போடு ,
மாண்புமிக்க பண்போடு ,
அழகிற்கு நீ எல்லைகோடோடு,
வீர் என்று சிரிப்போடு ,
முழு நிலவாய் புன்னகித்து

விரைந்து வந்த பெருநாள்.
தாயிக்கு நீ சேயாகி ,
இன்று ஒரு சேய்க்கு நீ தாயாகிலும்,
குழந்தையாய் பவனி வருபவள் .
தோழி நீ என்றும் ,
வற்றாத வளம்பெறுவாய்,

சிறப்பான வாழ்க்கை பெற்றாய் ,

அருமையான உறவுகள் பெற்றாய் ,

அழகான குழந்தை பெற்றாய் ,

நட்பான தோழமை பெற்றாய் ,

அளவிலா வாழ்நாள் பெற்று , உன்

அகம் மகிழ என்றும் வாழ

வாழ்த்தும் தோழியின் தோழன் .
கவிதை பூக்கள் பாலா

Monday, August 15, 2011

என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்

நண்பன் ஈரோடு சசிகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :

நட்புக்கு இன்று பிறந்த நாள் ,
துளிர் விட்ட நாள் முதலாய்,
பல கொண்டாட்டங்கள் கண்டிருந்தாலும்,
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள் , என்
தேசமே கொண்டாடும் விடுதலை நாளுமல்லவோ !
மறக்க கூடியதோ இந்த நாளும் ,
என் தோழமையின் குரல் கேட்ட
நாளும் அல்லவோ இன்று எனக்கு,
சினிகிட்ட அலைபேசி,
சிலகித்ததோ மனம் முழுக்க ,
துள்ளி குதித்து ,ஆவி அனைத்து,
வாழ்த்து சொல்ல விழைந்து - முடியாமல் போனாலும்
அனைத்தையும் நினைத்தே வாழ்த்து கூற நினைத்து
என் எண்ணங்கள் வார்த்தை இன்றி திக்கு முக்கட
ஒற்றை வரி வார்த்தையை அந்நிய மொழியில் சொல்லி விட்ட
வருத்தத்தோடு இம்மடலையும் வடிக்கின்றேன்.
என் தோழமைக்கு ........

நல் எண்ணம் உனக்குண்டு
உன் நட்பிற்கும் பொருளுண்டு ,
சிந்தனைகள் சிறகடிக்கும்
கலை ரசிக்கும் சிறப்புண்டு,
பொறுமைக்கும் எல்லை இல்லை
நகைசுவைக்கும் வறுமை இல்லை
வாழ்வினில் என்றும் உனக்கு குறைவில்லை
உனை வாழ்த்துவதிலும் என்றும்
என் மனம் சுனங்க போவதுமில்லை
என் தோழமைக்கு இன்று பிறந்த நாள்........
வாழ்த்துகளோடு ..........
கவிதை பூக்கள் பாலா..