என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, May 31, 2011

என்றும் மாறா உறவானவளோ .....


தங்கை அவள்,
என்றும் அண்ணன் மடியினில் தவழ்ந்திடும் மழலையோ !
பல மாற்றங்கள் அவள் வாழ்வில் கண்டாலும்,
மாறாத உறவின் பாலம் ஆனவளோ !
தங்கை எனும் வார்த்தையிலே ,
உயிர் தாங்கி நிற்கும் உன்னத உறவானவளோ !.
கொடிய கண்களையும் தட்டி வைக்கும்,
நம்பிக்கையின் எல்லை கோடானவளோ .......
உள்நாட்டு பேரினை போல்,
என்றும் முடிவில்லா (செல்ல) சண்டை இடுபவளோ !.
அடுத்தவன் சாடினாலே - அண்ணனின்
போர்ப்படை தளபதியாய் தங்கை மாறிடுபவளோ ! ,
மிட்டாய்க்கு சண்டையிட்டு - பின்
விரல் பிடித்து பள்ளிசென்ற காலமும் முதற்கொண்டே ,
உற்றதோழியும் அவளே !, உயரிய பாசமும் அவளே !
அடுத்த தெருவில் காதல் அம்பை எய்த அண்ணனையும்,
தனை நோக்கிடும் அம்புகளை ஒடித்திடும் வீரனாகியவளோ ! .
கரம் பிடித்து கொடுப்பவனை , கால் தொட்டு வரவேற்றிடும்
மனவலிமை கொடுத்திடும் பாசத்தின் முழுமையானவளே !
அண்ணன் இல்லத்தரசியை இணைபதிளும் முதன்மையானவளோ !
தான் ஈன்ற குழந்தைக்கு உலகில் - அண்ணனை
முதன்மை உரிமை உறவாக மாமனாகி மகிழ்ந்தவளோ !
ஒரு வயிற்றில் மலர்ந்து இருமலராக வாழ்ந்தாலும்,
மனதில் காதலாய் இன்னொருவன் இருந்தாலும்,
என்றும் உன்னதமாய் இதயத்தில் ஓர் உறவாய் வைத்தவளோ !
வாழ்விழந்து போனாலோ ,
கொண்டவன் கொடுங்கோலனாய் மாறினாலோ ,
என்றும் காக்கும் துணையாய் அண்ணனை நினைபவளோ !
உலகில் பயணம் முடிந்து போகும் வேளையும்,
அண்ணன் பட்டுடுத்தி அழகா பவனி செல்பவளோ !
மலர்ந்த நாள் முதல் அண்ணன் தோல்சுற்றி
வலம்வந்து உலகில் என்றும் மாறா உறவானவளோ !
(அண்ணன்)தங்கை .............

அண்ணன் தங்கை பாச உணர்வுக்கு
என் இந்த கவிதையை
பரிசாக கொடுக்க விரும்புகிறேன் ..........

கவிதை பூக்கள் பாலா....

Friday, May 20, 2011

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 3

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 1

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 2

சூரிய விழியின் சுடாத ஒளிக்கதிரை
சுகமாக உள்வாங்கி சுகந்தமான நிலவானேன் ,
விழிகள் மேல்செல்ல , அவளை தழுவியதால்
காற்றும் தென்றலாக என் உணர்வுகள் உள்வாங்க ,
அவளிட மண்டியிட்ட என் விழிகள்
விரைவாக தஞ்சம் புகுந்தது என்னுள்ளே,
கால்கள் மெல்ல நடைப் போட்டு நடை பழகினாலும் ,
விடைபெறாத என்கருவிழிகள்
விவரமாய் ஆராய்ந்தது அவள் அழகை ,
பறக்க துடிக்கும் முடியிழைகள், அவற்றை
மெல்ல தழுவி அரவனைக்கும் அவள் கரங்கள் ,
வடிந்து வீழாத சாயப்பூச்சு ,
கண்கள் உறுத்தா கண்மை அளவு ,
காதுகளில் ஊஞ்சலிடும் செயற்கை காதணிகள் ,
ஆவி அனைத்து விளையாடும் தங்கச் சரடு ,
மேனி அழகின் பாதுகாவலனாய் தவம் செய்த சுடிதார் ,
மணிக்கட்டில் காலம் சொல்லும் கை கடிகாரம்,
விரல் இடுக்கில் மகுடமாய் பகட்டு மோதிரம் ,
தோளில் கை கோர்த்து, இடையை வலம் வந்து
மடியில் தலை வைத்து உறங்கும் தோள்பை ,
கால்களில் கட்டுண்டு , கால்தொட்ட மமதையில்
சிரித்து சிரித்து சித்தரவதிக்கும் கால்கொலுசு,
தேவதையை சுமந்து பரவசமடையும் பாதணிகள் .
முழு நிலவு வந்ததால் முழுகி போன சூரியனும் ,
அதையும் தடுத்து விட மேகம் மிதமாக குடைபிடிக்க
கண்களில் பழைய காஷ்மீரை கண்டேன் .
விழிகள் துளை இடுவதை கண்டும் சிரித்தே
சிறைபடுத்தினால் என் உணர்வை ......
இதயம் தொடர்ந்து துடிக்கும் ........
கவிதை பூக்கள் பாலா ..
.

Friday, May 6, 2011

இன்னும் எத்தனை காலம்தான்..


வார்த்தைகள் வரவில்லை ,
வாக்கியங்கள் தொடுக்க முடியவில்லை ,
நம்மை சுற்றி ,
நாய்களும் , நரிகளும்,
மனித முகம்வேய்த்த ஓநாய்களுமே!
ஏமாறும் நொடி நோக்கி வளம் வருகின்றன ,
பூமி பிளக்கும் இயற்கையும் ,
வானை பிளக்கும் செயற்கையும் ,
கூறுபோடும் கொலைக்கலமான பூமி பந்து .
எல்லை தாண்டி செல்லும் பந்தாக என்று
மாறுமோ -அன்று
ஆனந்த படவோ , வருத்தப்படவோ ,
நாம் இருக்க போவதுமில்லை .
தெரிந்தும் ஏன் இந்த கொடுமைகள் .......
வீழ்த்துபவன் வல்லோனாகவும் ,
வீழ்பவன் கோமாளியாகவும் சித்தரிக்கும் (எத்தளிக்கும் )
கொடுமைகள் இன்னும் எத்தனை காலம்தான்.........
.............கவிதை பூக்கள் பாலா
.