என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 30, 2010

கடலலை



















சீற்றமுடன் சீறிவரும் கடலலையே !
சினம் தணிந்து திரும்புவதேன் !
கஜினி போல் போர் தொடுக்கும் கடலலையே !
கரையை வெற்றி கொள்ளாமல் வீழ்வதேன் !
காற்றின் இசைக்கு நடனமாடும் கடலலையே !
சில நேரங்களில் மக்களை சீண்டி பார்ப்பதேன் !
பயந்தவனுக்கு பூச்சாண்டி காட்டும் கடலலையே !
மதியாதவனுக்கு மண்டியிடுவதேன் !
நண்டுகளுக்கு கரைகாட்டும் கடலலையே !
நடுங்கியவனுக்கு நடுகடல் காட்டுவதேன் !
கரைக்கு மணற்பரப்பும் கடலலையே !
கவிஞ்சர்களுக்கு கற்பனை வள்ளல்லாகிறாய் !
உன் ரசிகனுக்கு தென்றலாகும் கடலலையே !
அழிவில்ல அமிழ்தத்தை உன்னுள்ளே பெற்றவளே !
அழகுடன் ஆர்பரிக்கும் கடலலையே !
ஆனந்தத்தில் புத்துயிர்பெரும் மனித உள்ளமே ! - பாலா

Sunday, November 28, 2010

குழந்தை அழகு


புன்முருவும் புது மலரே !
புதுமையான அரும் மலரே !
வெறுமையான அகமகிழ்வே !
யுக ஆனத்தின் உச்ச மலரே !
கபடம் இல்ல கவிதை மலரே
என் கண் மலரே !
உனக்காக இந்த கவிதை மலரே ! - பாலா

Friday, November 26, 2010

கொலுசு














கவிதை
படிக்கும் உன் பாதத்திற்கு
கொலுசு மாலை அணிவித்தது யாரடி பெண்ணே !
உன் நடை நாட்டியத்திற்கு ,
இசையமைக்கும் கொலுசோசை
உன் வருகையை
நான் மட்டும் அறிய தனி ஓசை
உன் நடையின் நளினம்
சொல்லும் உன் கொலுசோசை
உன் காதலை தினம் சொல்லும்
உன் கொலுசோசை
என் காலை பொழதின் கனவை
கவிதை ஆக்கும் உன் கொலுசோசை. - பாலா

மண்டியிட்டு காதலை பெறாதீர்கள்




















மண்டியிட்டு
காதலை பெறாதீர்கள்
மனம் கவர்ந்து காதலை பெறுங்கள்
மாற்றங்கள் உடையில் (வெளி தோற்றம் ) மாறலாம்
கொண்ட காதலில் மாறாதீர்கள்
உண்மைகள் காதலில் காலம் தாழ்த்தலாம்
ஆனால் காதலின் ஆயுள் முடிவற்றது
காதலில் காமங்கள் இடையிடையே வந்து போகலாம்
காமமே காதலை உயிர்பிக்காது .
(தத்துவம்மாதிரி இருக்குல்ல) - பாலா

இந்த போடோவுக்காக எழதியது

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால் !!!














கன்னத்தில் முத்தமிட்ட காதலியே !
அடுத்து உதடாக இருக்குமோ !
என துடித்த என் இதய துடிப்புகள் ,
நீ கண் சிமிட்டி , உன் விரல் தொட்டு
முகம் தூக்கி கண் ஊடுருவிய பார்வை ,
எனை சம்பட்டியால் அடித்ததடி காதலியே !
காதல் (பாசம் ) அளவற்று இருக்கும் போது,
காமம் எதுக்கடா என் காதலனே ! என்று
சொல்லாமல் சொல்லி விட்டாயடி என்னவளே !
செருக்கோடு நீ நடந்துகொள்ளும் கண்ணியமே
என்னுள் என்றும் உன் நிழல் பதித்ததடி - பாலா

காதல்


காதல்
காதலை கடக்காதார் கனவிலும் இல்லை,
கனவிலாவது காதலை உலராதார்
இவ்வுலகினில் பிறந்ததில்லை.
ஊருக்கு தெரியாத காதலும் உண்டு,
உள்ளதை உருக்கிய காதலும் உண்டு,
உதட்டளவில் உளறிய காதலும் உண்டு,
உலகிற்கே வரலாறாய் நின்ற காதலும் உண்டு,
காதலின் ஆழம் என்று நினைத்து,
தன்னை மாயத்துக்கொண்டவரும் உண்டு.
தூய காதல் துணிந்து, காதலுக்கு
அழகாய் உயிர் கொடுத்தும் உண்டு.
உறவுகளின் மகிழ்ச்சியில்
உயிர் கொடுத்த காதல்,
காதலின் உச்சத்தில் காதலின்
பரிசை (வாரிசை) உலகிற்கு தந்தவரும் உண்டு - பாலா

Saturday, November 20, 2010

ஒரு வரி கவிதைகள் .......( அப்படின்னு நினசிக்கனும் )


முகம் பார்க்கும் கண்ணாடி
பார்ப்பவனை குளோங் செய்யும் மருத்துவர்

மிதிவண்டி
தன்னை மிதிப்பவனை சுமந்து செல்லும் அடிமை

நிழல்
வெளிசச்த்தில் பின்தொடர்ந்து இருளில் மறையும் உண்மை தொண்டன்

தீபந்தம் ( மெழுகுவர்த்தி )
தன்னை அழித்துக்கொண்டு எரித்தவனுக்கு வழிகாட்டும் தியாகி
காதல்
இதயத்தை துளைத்தெடுக்கும் துப்பாக்கி

வத்திக்குச்சி
உரசினாலே எரிந்துபோகும் கண்ணகி

மேளம்
அடிதாங்காமல் அழுதாலும் ,
அடுத்தவனை ஆனந்தபடுத்தும் நடிகன்

விதை
அடக்கம் செய்தபின்னும் உயிர் தெழும் ஏசு

சோளப்பொறி
தீயிட்டு வருப்பவனுக்கும் , அவன் போடும் இசைக்கு
ஆனந்தமாய் கூத்தாடி புன்னகைக்கும் நடனகாரி

Thursday, November 18, 2010

புன்னகை


புன்னகைக்கும் புது மலரே !
புதிர் போடும் புன்னகையே !
எத்தனையோ மாற்றங்களை
உருவாக்கும் புன்னகையே !
கன நேரம் மகிழ்ச்சியுறும் இதயத்தில்
இடையிடையே சஞ்சலிக்கும் புன்னகையே !
பதில் விளங்கா புன்னகையே !
பரிதவிக்கும் உன் எதிர் முனையே ! - பாலா

Monday, November 15, 2010

சிகரெட்
















பார்க்க
அழகாதான் இருக்க
பத்த வச்சா சுகமாவும் இருக்க
பிடிக்கும்போதும் ஸ்டைல்லாவும் இருக்க
பழகிபோனா மறக்கா முடியாமையும் இருக்க
என் மூளைக்கு புத்தி சொல்லும் அறிவாளியாவும் இருக்க
வைத்தியம் இல்லமா உடலை மெலியவும் வைக்கிற
உன்ன எரிச்சிகிட்டு எனக்கு சதோஷத்தையும் கொடுக்கற
ஏனோ என் உடல்மட்டும் உனக்கு பிடிக்கவில்லை
மெல்ல மேலுலகிற்கு விசா வாங்கியும் கொடுக்கற .......
- பாலா

Wednesday, November 10, 2010

பூங்காவனம்















பூக்கள் புன்னகைக்கும் பூங்காவனம்
பசுமையை போர்த்திநிற்கும் பஞ்சவர்ணம்
சோர்வுகள் சூம்பிவிடும் சுந்தரவனம்
கண்கள் குளுமைபெறும் குமரியினம்
குயில்கள் இசை நடத்தும் இன்பவனம்
நண்டுகள் நடனமாடும் நந்தவனம்
வண்டுகள் பசிதீர்க்கும் காமவனம்
தென்றல் தாலாட்டும் தாய்வனம்
காதலர்கள் காதல் பயிலும் காந்தவனம்
பல கவிதை படைத்திடும் கலைவனம்
வறியவர்களையும் அரவணைக்கும் வசந்தவனம்
இயற்கை சொந்தம் கொள்ளும் சொர்க்கவனம்
- பாலா

Saturday, November 6, 2010

முரண்பாடு

ஒருதலை காதல்
நான் காதலித்தவளுக்கு என்னை பிடிக்கவில்லை,
என்னை காதலித்தவளை என்க்கு பிடிக்கவில்லை.
விலைமாது
பொருளையும் கொடுத்து தன்னன்பையும் கொடுத்தாள் மணைவி
பணத்தையும் பெற்று அழிக்கும் நோயை தந்தாள் விலைமாது !
சகுனம்
பூனையை சகுனம் என்ற மூடனே !
பூனை படையுடன் வருபவனுக்கு வெண்சாமரம் வீசுவதேன் !
லஞ்சம்
கேட்காத கடவுளுக்கு லஞ்சம் (காணிக்கை ) கொடுக்கும் பக்தனே !
கேட்கும் மனிதனுக்கு கொடுக்க மறுப்பதேன் ( தப்பு தான் அடிக்காதீங்க )
- பாலா

Friday, November 5, 2010

வானவில்













இயற்கை
படைத்த உலகில் நீயும் ஒரு மாயை
அரைவட்டம் உன் உடல் தோற்றம்
பல வண்ணம் உன் உடை அலங்காரம்
வானுலகின் நுழைவாயில் தோரணமும் நீ ..
வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமா நீ
வானுலகின் போர் ஓய்ந்த அறிகுறியா நீ
வெண்ணிலாவில் குளிக்கும் தேவதைகளின்சேலை குவியலா நீ
விண்ணுலக கூட்டணி கட்சி கொடியோ நீ
வண்ணங்களின் பூர்வீகம் நீ தானோ
ராமனும் ஒடிக்க முடியாத வில்லும் நீயோ
வாலிபர்களின் ( கவிஞ்சர்கள் ) கனவு நாயகியும் நீயா ?
- பாலா

விலை மாதர்















கற்பிற்கு விடுதலை வாங்கி கொடுத்தவர்கள்
விரும்பாத விருந்திற்கும் வரவேற்பவர்கள்

மறந்து போனது என் வாழ்க்கை


















நீ கண் அசைத்தாய் என் கனவுகள் மாறிப்போனது
நீ நெருங்கினாய் என் சுயசிந்தனை அற்று போனது
நீ காதலன் என்றாய் என் கனநேரங்கள் நீண்டு போனது
நீ என் உறவு என்றாய் என் உறவுகள் உதரி போனது
நீ வாழ்க்கை என்றாய் அது நீ தான் என்றேன்
நீ உலகம் பெரியது என்றாய் ,
யுகமே உன்னால் சிறியது என்றேன்
நீ மறந்து விடு என்றாய் ,மறந்து போனது என் வாழ்க்கை .
- பாலா

Thursday, November 4, 2010

எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..



















அழகின் முகவரி ,
ஆகாயத்தின் ஆர்பரிப்பு
ஆழ் கடலின் முத்து ( சொத்து )
ஆடவரின் அல்லி ( அழகிய )
காற்றின் தென்றல் ( புயல் இல்ல )
மலைகளில் காஷ்மீர் (பழைய )
புல்நுனியின் பனித்துளி ( பனி காலத்துல )
அமிழ்தத்தின் சுவை ( தெரியாது )
பூக்களில் மல்லி ( முள்ளு இல்லப்பா )
மணங்களில் மண்மணம் ( தாய் )
நட்பிலே கர்ணன் ( உயிரை எல்லாம் கேட்டபடாது )
அகத்திலே அன்பு ( காசாபணமா )
வெளிலே வேங்கை ( வீட்டுக்குள்ள மட்டும் )
எல்லாம் நான்தாப்பா ..... ஹி .... ஹி . ...ஹி ...
எல்லாம் ஒரு விளம்பரம் தான் ..

தீபாவளி திருநாள் !!



தீபத் திருநாள்
தித்திக்கும் சுவை நாள்
புத்தாடை கிடைக்கும் நாள்
புதியவர்களையும் வாழ்த்தும் நாள்
வானம் வண்ண கோலமாய் மாறும் நாள்
சிறுவர்களும் திவிரவாதியாய் மாறும் நாள்
அனைவருமே ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் நாள்
பாவம் பல கோழி ,ஆடுகளின் கடைசி நாள்
மதுபானாங்களின் விற்பனை உச்சத்தை எட்டும் நாள்
பணம் படைத்தவனின் பகட்டு நாள்
ஏழைகளோ கந்து வட்டிக்கு கை ஏந்தும் நாள்
குழந்தைகளின் முகத்தில் குதுகலிக்கும் நாள் .
இந்த தீபாவளித் திருநாள்.-