என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, November 26, 2014

இனி ஏது பிரிதலிங்கே.....:


காதலிக்கும், காதலனுக்கும் 
வார்த்தை போர் ,
யார் காதல் பெரிதென்று.


உனை அரை நிமிடமும் அகலேன்
உன் நினைவையும்விட்டு விலகேன்
புரியாதவன -காதலி,
உன் சந்தோஷம் பெரிதென விரும்பி
உனை சுற்றும் பக்தன்
நான் காதலன.


வார்த்தைகள் கனல் கொண்டு
காதல் பேர் ஆயுதமின்றி,
பார்த்துக்கொண்டிருந்த
வன ஈக்கள் பரிதாப்பட்டு
நாட்டமை செய்ய
முடிவெடுத்து.பிரதிட்டு
கூட்டியது விசாரணை சபை...


காதல் யாதென்று புரியா
நீங்கள் எப்படி காதலர்
முதற்கேள்வியே
மூச்சு திணறல்,
வாதங்கள் விதவிதமாய்
 அவர்கள் ஒருவர்மேல்
வைத்த காதல் உச்சம்
வைத்து வாதிட்டனர்,
வனம்முழுக்க ஆர்வம்
தொற்றியது நாட்டமை
தீர்ப்பு யாதாகும்
தனிவிவாதம் நடந்தேறியது.


தீர்ப்பு சொல்ல ஈக்கள்
நாட்டாமை(ராஜா) தொண்டை
கனைத்து ரீங்காரம்மிட்டார.


யாது தவறென்று புரியா
காதல் அன்பர்களே!,
உங்கள் காதல் பொய்யல்ல
விதமே பரிதாபம், ஏக்கத்தோடு
இளம் ஜோடிகள்........


காதல் யாதெனறிவாய் முதட்
காதல் எப்படி தனிமைப் பட்டது,
என்காதல்.. என் காதல்..  
சிவந்துமுகத்தோடு
கருணை விழியோடு தொடர்ந்தார்.


அன்பு பரிமாறிய பிறகே
 காதல் என அறிவீர்களா?
ஒன்றான இதயம் ,உணர்வு,
 ஏன் தனிமைப் பட்டது.
நம் காதல் என்ன ஏன்?
 அறியாய் ..........


நிசப்தம் நிலைத்து நின்றது,
தொடர்ந்து தீர்பெழுதிய
வார்த்தை தொடர்ச்சி..
நான் விடுத்தது நம் காதல்
 நாம் என்செய்வோம்
விவாதம் புரிதல் அன்பொழுக
அரவணைத்து நம் காதலாய்
பாருங்கள் உணருங்கள்.


நம் காதல்உயிர்த்தேவை
யாதென சினுகுங்கள்,
காதல் அறையில்
வஞ்சிக்கா சிறைப்பட்டு
வளமோடு வாழ்வீர்
காதல் ஈரிதயம்
ஓர் உணர்வு கொண்டது.
வார்த்தை முடித்து
கம்பீரம் மிடுக்கோடு
காதல் சுவையறிந்த
நல்லோனாய்
தேணீ நாட்டமை......


பலத்த கரவோசை
காதலோடு கவிபடித்து
இணைத்த உள்ளம்
கனிந்த காதல்
இனி ஏது பிரிதலிங்கே........

- கவிதை பூக்கள் பாலா

தொடர்ந்திடுமா வாழ்க்கை இனி......:



இதயம் துடிக்கின்றது,
உடலும் நடிக்கின்றது,
பொய்யுடல் இதுவென்றரியாமலே.


மருத்துவங்கள் ஓதுகின்றது,
தோழமைகள் கருணை
மழைபொழிகின்றது,
உறவுகள் உருகிப்போகிறது
பொய்யுடல் இதுவென்றரியாமல்..


நெடுவானம் நிர்மூலம்,
கதிரவனும் கருகிபோய்,
தென்றல் பேயிரச்சல் புயலாய்,
பூக்களும் கொடுவாளோடு,
கண்ணீர் கடலை மிஞ்சி,
வார்த்தைகள் அர்ஜுனன்
போர்க்கோல காண்டீபமாய்,
என் இதயம் சல்லடையாய்.

கனிவில்ல காதலாம் என்காதல்
உணர்வில்லா போனதாம் உயிர்க்காதல்,
காதல் அகராதியறியாமல் பிதற்றகள்,
முடிவு செய்துவிட்டு முகவரிதேடுதல்
பிரிவின் ஓர் இலக்கனமோ.

பறிக்கொடுத்த இதயத்தை
பிரபஞ்சத்தில் எங்கு தேடுவேன்
கருனையற்று நீ அறுத்தெறிந்த
காதலைக் கொன்று
நடைப்பிணமாய் அலையவிட்டு
ஆனந்தம்கொண்டாயடி.

வாழ்வுமுடியவில்லை நானறிவேன்,
வாழ்கையாதென்று தெரியேன்இனி
பயணம் முடியும் மட்டும் தொடருகின்றேன்.
துணையாய் அவள் நினைவுகள்
வழியாய் அவள் வசவுகள்....
தொடர்ந்திடுமா வாழ்க்கைஇனி......

- கவிதை பூக்கள் பாலா

Sunday, November 23, 2014

வார்த்தை வதம்

குதித்து ஆர்பரிக்கும்
குற்றாலமான மனதில்...
கல்லெறிந்த குலமாய்
மாறிய நிமிடம்..
உன் வார்த்தை வதம்
செய்த கொண்டிறிருகிறது.....

- கவிதை பூக்கள் பாலா

Saturday, November 22, 2014

நாளும் தினமும் :


விடிந்து விட்டதா
விழிகளின் சோகம்,

னித்துளி சுமக்க
இமைகளின் ஏக்கம்,


தயசூரியனை காண
பெற்றேரின் விருப்பம்,


டை பயின்று
உடலைக் குறைக்க
உடலின் ஆர்வம்,


டுத்து உருல
சோம்பலின் கபடம்,


ணியோசை எல்லாம்
இப்ப எதிரிகளின்
சங்கே முழங்கு........


கொஞ்ச நேரம்
சிணுகளின் ரகசியம் ...


புலம்பல்கள் எல்லாம்
ஒப்பாரிகளின் இசையாய்...


ப்படியே தொடங்குது


நாளும் தினமும்.....

- கவிதை பூக்கள் பாலா

பதறியழும் மனிதபிறவிகள்:



விவரமறிய உலகினுள் விரும்பியா
அன்னையின் கருவிலே அவதரித்தோம்,
சுமைகளிலலா குழந்தைப்பருவம்,
கூடி ஆடியப்பள்ளிப்பருவம்
குழைந்து நெளிந்த விடலைப்பருவம்,
காதல் பிடிக்கும் கபடப்(வாலிப)பருவம்,
ழுததை கொடுக்கும் கல்யாணப்பருவம்,
டமையாற்றும் காக்கும்(பெற்றோர்)பருவம்,
ளைத்தொதுங்கும் கடைசிப்பருவம்,
றுக்கமுடியா பருவ மாற்றங்கள்,
தறியழும் மனிதபிறவிகள்....
றந்தபினும் உலகம் தேடும்
அதிசியமான மனிதபிறவி..
ற்றுக்கொள்ளா வாழ்க்கை முறைகள்,
ன்னும் விடையறியா மனிதமுகங்கள் !!!!


-
கவிதை பூக்கள் பாலா

Friday, November 14, 2014

கடுகானாலும் வானம் கடந்து நிற்கும்

பிடித்தவரை இடறி நின்று
சாதித்து சிகரம் தொட்டாலும்
மனம் ஏனோ முழுமையடைவதில்லை ....
வெற்றி இனிப்பதில்லை
வெற்றிடமாய் காணும்
திசை எல்லாம் ...
சிறிய புன்முறுவல் ,
சின்னதாய் முகமலர்ச்சி
காணத்துடிக்கும் நெடிப்பொழுதும்
மரணத்தையே தோற்கடிக்கும்
வலி குடல் கவ்வும் ,
இதயம் சுடுகாடாய் எரியும்
கைதட்டல்கள்
கடைசி இசையாய்
காது நுகரும்
வாழ்த்துக்கள் ஒப்பாரியாய்
ஓநாயாய் ஓலமிடும்....

இதயம்தொட்டவர்  கரம் பற்றி
 வெற்றிக் கனி
பறிக்கும் நிமிடம்
கடுகானாலும் 
வானம்  கடந்து நிற்கும்
 இன்பம் இமயம் தொடும் ....

- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 13, 2014

குழந்தைகள் தினம்

குழந்தைகள் தினத்தில அவங்களுக்கு போட்டியா ?
ஏன் ? இப்படி எல்லாம் அவங்கள சந்தோசமா பாத்துகங்க
நாளைக்கு அவங்க கூட நேரம் அதிகமா செலவிடுங்க .
குழந்தைகளோட குழந்தையா மன ரீதியா மாறிடுங்க..
நினைவுகளை  பகிந்துக்  கொள்ளுங்கள்........

Tuesday, November 11, 2014

காதல் உயிரென இன்னும் தொடர்வது ...........

சந்தோஷ நிமிடம் நாம்
பேசிய முதல் வார்த்தை
கடின காலம் கண்டித்து
நீ நடத்திய மெளனயுத்தம்
நிறைவு நேரம் உன்துயர்
துடைத்து நீ என் நெஞ்சில்
புதைந்த அரவணைப்பு
இறுகிய நிமிடம்
துக்கம் தாளாது நீ சிந்திய கனம்
கரம் இருந்தும் துடைக்க துப்பில்லா
நான் துடித்தது
சினம்நிறைத்தது
சிந்தனை இருந்தும் தெரிந்தும்
வீம்பாய் சிறையில் சிக்கியது
பொறுமை புரையோடியது
கண்டும் காணாது
நீ நடத்திய நாடகம்
உண்மை என நம்பியது
வலிகள் நிறைத்தது
உன் நினைவில் நான்
இல்லாமல் போனது
உணர்ச்சி நிறைத்தது
நீ கொண்ட
காதல் உயிரென
இன்னும் தொடர்வது ...........
- கவிதை பூக்கள் பாலா

 

இதழின் ஓரம் சிவந்த தடம் ......

தழின் ஓரம்
சிவந்த தடம்
காரணம் யாதென்று
வினவும் பார்வைகள்

கலங்கப் பார்வை
ஏளனப் பார்வை
ஏக்கப் பார்வை
காமப்பார்வை
கனிவுப்பார்வை
நக்கல் பார்வை
காரணம் ஒன்றேதான்

சினம் தடம் பதித்தது
பற்கள் உதவியது .........

- கவிதை பூக்கள் பாலா

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

Monday, November 10, 2014

வலிகள் மட்டும் மாறாமல் தொடர்கின்றது..........

இதயம் ஏனோ கனக்கின்றது
காரணம் புரிந்தும் புரியாமல் இருக்கின்றது
விவரம் அறியா குழந்தை போல்
விரல்சூப்பி வில்லங்கம் புரிகிறது
உணர்வும் அறிவும் சண்டையிடுகின்றது
வலிகள்  மட்டும் மாறாமல் தொடர்கின்றது
- கவிதை பூக்கள் பாலா

Thursday, November 6, 2014

வயது அறுபது ஆனால் என்றும் நீ பதினாறு .....

குழந்தையாய்
திரையில் அறிமுகமாகி
சகலத்தையும் கற்றாய்
திரைத்துறையில்
சகலகலாவல்லவனானாய் .........
இமயம் முதல் குமரி வரை
திரைத்துறையில் நீந்தி
மகாநதியாய்  வலம்வந்தாய் ......
மாற்றங்கள் எதுவானாலும்
துணிந்து செயல்பட்டாய்
செவாலியர் சிவாஜியின்
செல்லக்குழந்தையானாய்
வேடங்கள் பல கண்டு
வீறுநடை போட்டு
ரசிகனை தொண்டனாய் மாற்றாமல்
தனிப்பாதை உனதாக்கி
இந்திய திரைவானில்
தன்னிகரில்லா இந்தியன்
திருமகன் நீயானாய்..
வயது அறுபது ஆனால்
என்றும் நீ பதினாறு
பிரபஞ்ச நட்சத்திரமாய் என்றும்
ஒளிர்வாய் நவரச உலகநாயகனே !
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, November 5, 2014

நிலவுக்குள் நீந்த முயன்றேன் :

நிலவுக்குள் நீந்த முயன்றேன்
பாட்டியின் அனுமதி எங்கே !
கடவுச்சீட்டு பரிசோதனை -
எனக்கு சோதனை.

கட்டணம் யாதென்றால்
இரண்டு வடை வாங்கினால்
இங்கிருந்தே போகலாமாம் ..

வழி தெரியாமல்
நான் முழிக்க
நரியாரின் துணையுந்டென்றனர்

குதுகுலத்தில்
மனம் குத்தாட்டம் போட
இடியாக இயம்பினர்
 நரியாரின் அடிப்பொடிகள்.

கடவுச்சீட்டிற்கு இரண்டு வடை
அவருக்கு நாலுவடையாம் ....
விக்கித்து வினவிய போது
வில்லனாக காக்கை வந்தது.

என்னடா இந்த சுப்பனுக்கு
வந்த வேதணை என்னுபோதே
பவ்வியமாய்
பல்லித்தார் காக்கையார்

காதும் காதும் வையுங்கள்
கால்மீது கால்போட்டு
கண்னுரங்கள் கனநேரத்தில்
கடவுச்  சீட்டு ........
ஆனால் வடை விருந்து
இடவேண்டுமாம் ....

மொத்தம் எத்தனை
வடைகளடா
வாங்குவேநென்றேன்
இதுதான் கடைசி வடை
வாங்கினால் இதேடு
இல்லை விட்டோடு
என்றனர் எக்கலதோடு .

 நிலவுக்கனவை
கழட்டி போடா
கடுகளவும் மனமில்லை .....
- கனவு தொடரும்
- கவிதை பூக்கள் பாலா  


வசந்தத்தின் விலாசம் .....
-------------------------------
வித்தைகள் பல பயின்றேன்
விசாலமான அறிவும் ஆய்தரிந்தேன்  
கனவுகள் கண்டு வந்தேன்
நேர்வழி மட்டுமே நலமென்றேன்
வாழ்க்கை வீதியில்
வசந்தத்தின் விலாசம்
தெரியாமல் தவித்தேன்.....
பணமெனும்
துடுப்பு சீட்டு இல்லாததால் ..........

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, November 4, 2014

இதயம் ....

இதயமும்
விழிகளும்
சண்டையிட்டது. 
நீ கபடம் செய்கிறாய் 
வலிகளை நான் சுமக்குறேன் ...
இதயம்  .....

- கவிதை பூக்கள் பாலா

பிரிவில்........

பிரிவும் ஒரு
தொடரோட்டம் தான் 
வாழ்க்கை ,
கருவறை முதல் பிரிவு
கல்லறை கடைசி துறவு
இடைக்காலம் இதனூடே ....
இதில் புரிதலிலும்
உறவிலும் , உணர்விலும்
நீட்டல், மழித்தல்
கடமை, கட்டாயம்
பலசாதி   பல்லிளிக்கும
பிரிவில்........

-கவிதை பூக்கள் பாலா

ஆகாயம் தடை சொல்லுமோ !

இடுதலில் தொடு நிமிடம்
சிகரம் தொட்ட குதுகுலம்
பசுமையின் நிறம் போல
வெறுமையின் முகமூடி அழகுதான்
பயணிப்பது சாத்தியமா ?
விழிகள் வர்ணிப்பது தடைபடுமோ !
அழகு ஆர்பரித்தால் ...
ஆகாயம் தடை சொல்லுமோ !

- கவிதை பூக்கள் பாலா

செல்லப் பொய்கள் விதிவிலக்கே!!!

இதழோடு தஞ்சமானேன்
இடைவிடாது முத்தமிட்டாள் 
தேன்ச்  சுவை என்றேன்
தெகட்டுதா உனக்கென்றாள்
அமிர்தம்  நீ என்றேன்
சுவையற்றுப்  போனேனோ !
கொப்பளிக்கும் கொதிகலனானாள் 
வற்றாத ஜீவநதி கங்கையென்றேன்
யார் அந்த கங்கை என்றாள்
மயக்கத்தில் நான் என்றேன்
குடிகாரனா நீ என்றாள்
ஆமாம்
உன் இதழுறும் மதுவருந்தும் 
காம குடிகாரன் நானென்றேன்
நாணத்தில் முகம் சிவந்தாள்...........
-கவிதை பூக்கள் பாலா

Monday, November 3, 2014

உன்னை காணும் கனவுகளோடு ...

இரவின் தொடக்கம் நீ இருந்தாய்
உணவின் போதும் உடனிருந்தாய்
செல்ல சிணுகல் செய்துவிட்டு
என்னை ஏன்?
நடுஇரவில் தவிக்கவிட்டாய்...
விழிகள் அசதியில்
கதவடைத்த  பின்னாவது 
கனவில் என்னுடன் பின்னிகொள் ...
விடியலை நோக்கி ...
உன்னை காணும் கனவுகளோடு  ...
- கவிதை பூக்கள் பாலா

மீட்டா இரவின் மெல்லிசை

உன் விரல்கள் மீட்டிய நாதாங்களின் ஓசை
மீட்டா இரவின் மெல்லிசை(கனவு) தானோ !!!
- கவிதை பூக்கள் பாலா

காமலோகத்தின் வாசல் திறந்ததடி ........

உனது அங்கங்கள் கீரிய நொடிப்பொழுது
மின்சாரம் பாய்ந்து என் தேக முழுதும் ......
இச்சைகளின் மொத்த தொடுபுள்ளியாய்
காமலோகத்தின்  வாசல் தெரிந்ததடி  ........
- கவிதை பூக்கள் பாலா


Saturday, November 1, 2014

நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்

விடாத  மழையிலும்,
 என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
 வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின்  அன்பில் 
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம் 
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா