என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 24, 2015

மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்:



வீருநடைபோடு விடியலை நோக்கி,
விடிந்திடும் என்றே நம்பிக்கைக் கொள்ளு,
நாட்டின் நிலையறிந்து வீதியில் இறங்கு,
உன்நலம் காக்கவே கருத்தினில் கொள்ளு,
கொள்ளையே கொள்கையாய் அடிமைகளின் நிலையில்
கொடுமைகளை கண்டே களத்தினில் நில்லு,
ஒற்றுமை இங்கே முழுமையாய் கூடு,
கொட்டமடிக்கும் கூடாரங்களை ஒழித்திட எண்ணு
மாற்றதின் நிலைகளை கூவியே சொல்லு,
நடிப்பில் திளைத்து நாட்டை பிளக்கும்
நயவஞ்சக அரசியலை நடுவீதியில் கொல்லு,
நாட்டின் நலமே நமதென மனம்பொங்கு,
மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்...
வென்று தமிழகம் காத்திட்டேன் என்ன சொல்லு,
நெஞ்சை நிமிர்த்து போராட்டம் தொடங்கு...

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment