என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, January 29, 2015

இன்று உலகை ஆளுது...


நோயும் நொடியும் இல்லமா
வாழனுன்னு ஆசைதான்..
கொசுக்களும், கெமிக்கலும்
கெட்ட சுற்றுசூழலும் பிணிய(நோய்)
வாவான்னு கூப்பிடுது...

உடலுல பாதுகாப்பற்று
எதிர்க்க இல்லாது தவிக்குது..
அழையா விருந்தாளியா
ஆளைக்கொல்லுது
முடங்கிபோகத்தான் வைக்குது....
மருத்துவம் வளருது..
அதைவிட நோய்கள் பலமா ஆகுது,
பணமும் விரையம் ஆகுது,
மனிதனை வென்று
இன்று உலகை ஆளுது...
- கவிதை பூக்கள் பாலா

''மாதம் மும்மாரி பொழிகிறதா''


ண்ணில் விதையிட்டு
காத்திருக்கும் விவசாயி...
நீத்துளி வேண்டி வர்ணனுக்காய்
ஆகாயம் நோக்கும் விவசாயி..
காலம் அறியா கண்ணைதிறக்கும்
இயற்கையின் அழிவு( மாற்றங்கள்),
அழிக்கும் வேதிநச்சுகளுக்கு
முளைக்கும் குதிரைகொம்புகள்..
அரசுகள் மாமனர்களாய்,
''மாதம் மும்மாரி பொழிகிறதா''
வெட்கங்கெட்ட வினவல்கள்...



தைக்கும் அந்நியனிடம்
அன்டிபிழைக்க வைக்குதடா,
ஆகாயம் தொலைந்து, பூமியும்
அண்டை மாநிலமும் கதவடைக்கிறதடா,
காய்ந்த வைற்றோடு
காக்காணி நிலத்தையும், காடுமேட்டையும்,
கட்டாந்தரையாக்கி கோடுபோட்டு
கலர்கலரா விற்பனை என்றார்களடா....
வி


மான்னியத்த வெட்டுவாங்க,
அப்புறம் எங்களையும் கொட்டுவாங்க.
மீத்தேன்னு முடிச்சி வச்சிடுவாங்க...
சேத்துக்கு அலைவீங்க,
கழுவ காகிதமும் பழகுவீங்க,
அதுக்கு காட்டையும் அழிப்பீங்க,
உங்கள வனவிலங்கும் அழிக்கும்,,
மனித சண்டை போய். மீண்டும்
மிருக சண்டை ஆரம்பம்...
அப்போ காட்டுல, இப்ப நாட்டுல...


வருத்தத்தோட எச்சரிக்கும் :
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 27, 2015

என்னுள் தஞ்சமிடு :--


ன்னியரின் கலங்கரையோ
காளையரின் இழுவிசையோ....
கயல்விழியால் ஆள்பவளோ ..
ஆகாயத்தில் தவழ்பவளோ...
கருவியால் என்னை வென்றவளோ..

டல் அன்னையின் முத்துமகளோ..
காற்றிலும் இளந்தென்றலானவலோ...
கவிதைகளின் கருப்பொருளோ..
கண்சிமிட்டும் பட்டாம்பூச்சியோ..
கற்பனைகளின் முகவரியோ...
கற்சிலைகளின் நிச உருவமோ..
காவியங்களின் கதாநாயகியோ....

வள் என்னவளோ, பேரழகியோ..
விழியம்பில் காதல் கனைதொடுத்தவளோ..
விடையறியா வினவுகின்றேன்..
விரைவில் என்னுள் தஞ்சமிடு
தலைசுமந்து காத்திடுவேன்,
உனதன்பில் திளைத்திடுவேன்....

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, January 14, 2015

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன் :-



தரணி போற்றும் தமிழனே
தலைநிமிந்து நில்லடா.....
எதிப்போனை துச்சமாய்
மனதில் கொள்ளடா !


வாழ வைப்பவன் தமிழனடா
தன்மானம் உள்ளவன் நாமடா!
வீரம் செறிந்தவன் தமிழனடா!
வீண்பழி சுமப்பவனும் தமிழனடா

சுற்றி வளைத்தாலும் ,
வஞ்சகம் செய்தலும்,
சுரண்டி தின்றாலும் ,
மீண்டு எழுபவன் நாமடா...

சுயஅறிவு உள்ளவன் தமிழனடா
அதனாலேயே ,
ஒற்றுமை அழிவதும் வீனடா,
நடிப்பில் ஏமாறுவது ஏனடா,
குடியில் உன்னை அழிப்பது
சரியோ சிந்திப்பாயாடா....

அரசியல் அறம்கொன்று
வாழ்பவனை அரியணையில்
விடுவது முறையோ முழிப்பாயடா...
சுற்றி வளைத்து நின்றாலும்
வாள்சுற்றும் தீரனடா..
பொருளுக்காய் புகழ்பாடு
பரதேசிகளை சுற்றி பாரடா..
மயக்கம் இன்று ஏனடா
மறதமிழன் என்றும் நாமடா....


சூதுசெய்பவன் தலைவீழும்
காலம் கனியுதடா- இன்னும்
கலக்கம் நெஞ்சில் வீனடா
வாழ்வோம் நாம் தமிழரென்றே
காப்போம் என்றும் ஒற்றுமை
எழுவோம் வீறுக்கொண்டு
விடியல் நம் விரல் நுனியில்....

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன்
- கவிதை பூக்கள் பாலா

''பொங்கலோ பொங்கல் ''

''பொங்கலோ பொங்கல் ''
வாழ்த்துக்களோடு உங்கள்
  கவிதை பூக்கள் பாலா
-------------------------------------------

பழையன கழிதலும், புதிய புகுதலும்
போகிப்பண்டிகையாய் அன்று. ....
கொண்டாட்டத்திற்கு எரித்தலும்,
ஓசோனில் ஓட்டையுமாச்சி இன்று...

கொண்டாட்டம் வேண்டும்
வடிவம் மாற்றலாமே !
வீதியை ஊரை நாட்டை
தூயமையாக்கலாமே இன்று
சேர்ந்து கொண்டாட்டம்
போடலாமே நன்று....

தமிழனில் திருநாள்
உழைப்பவன் பெருநாள்
விவசாயின் பொன்னாள்
விளைச்சலின் திருநாள்
கதிரவன் மகிழும்நாள்
வணங்கி போற்றும்நாள்

பொங்கலோ பொங்கல் என்றே
மனதிலும் சந்தோசம் பொங்கும் நாள்..
தமிழனின் கொண்டாட்டங்களில்
என்றும் முதன்மையான
பொங்கல் திருநாள்......

பொங்கலோ பொங்கல் என்று
ஆனந்தம் பொங்கட்டும்
தமிழன் தலை நிமிரட்டும்
விடியல் பிறக்கட்டும்
புதுப்பானை படையலும் போல
புதுமைகள் சிறக்கட்டும்,
குடும்பங்கள் தழைக்கட்டும்
சந்தோசம் பெருகட்டும்..........

வாழ்த்துக்களோடு உங்கள்
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 13, 2015

புதுமை பெண்

சுயம் கொண்ட மனதிற்கு காயங்கள் தான் பரிசா !
சூம்பி போன இதயங்களே விடை தாருங்கள் !
தவறாமை என்றிருக்க நிமிர்ந்துதான் நானிருப்பேன் !
சீண்டி பார்த்தால் சிலிர்ந்து தான் நானேழுவேன் !
விலக நினைத்து விட்டால் ஒதுங்கிச் சென்றிடுவேன் !
திறமை கொண்டிருக்கேன்  கூனி குறுகமாட்டேன் !
ஆதிக்க ஆணவம் செய்தால் இம்மியும் அசையமாட்டேன் !
தலைகனம் என்கென்ரெண்ணினால் கவலையுறமாட்டேன் !
என்னிலை  நானறிவேன் எந்தேவை  நான்புரிவேன் !
கடமை நன்கறிவேன் கண்ணியம் நான்மறவேன்  !
மனச்சாட்சி என் கட்டுப்பாடு என்றே நானறிவேன் !
உண்மை பாசமென்றால் உயியோடு உருகிப்போவேன் !
நட்பின் பொருளறிந்தால் கைக்கேர்க்க தயங்கமாட்டேன் !
முடியும்மட்டும் உறுதியாய் உதவிகரம் கொடுப்பேன் !
உதாசீனம் படுத்தினால் உதறிதான்  சென்றிடுவேன் !
 நேர்கொண்ட பார்வை , நிமிந்த நன்னடை 
தீரம் வீரம் தன்னம்பிக்கை சுயபுத்தி சுற்றம் சுழலும் 
பாரதியின் 
புதுமை பெண்களடா !

 இன்று  ஓங்கி எழுந்தோம்மடா  !

 - கவிதை பூக்கள் பாலா

Sunday, January 11, 2015

தெரியா வலிகள்:-



இதயம் ஏன் தவிக்கிறது,
மனமும் ஏனோ கனக்கிறது
புரியா உடலும் சோர்கின்றது,
பொருளற்று மூளை இயங்குகிறது
வலிக்கொண்டு நெற்றி சூடாகிறது,
கண்களில் ஏக்கம் தெரிகிறது,
உதடுகள் வேலையற்று மௌனமாகிறது,
செவிகளின் வேலை வீணாகிறது.
கரங்கள் குரங்காய் மாறுகிறது,
கால்கள் செயலற்று போகிறது,
தெரியா வலிகளால்
மனம் தாக்குறும் போது........



- கவிதை பூக்கள் பாலா

மனிதத்தை தேடுகிறேன்...

விந்தைகள் நிறைந்த உலகில்
விரைந்து தான் நிகழ்வுகள் அரங்கேற்றம்...
இமைக்கும் இடைவெளியில்
இல்லாமல் போகும் மனித உரியினம்....
கண்விழிக்கும் விடியல் முனே
கண்ணாடி சில்லுகளாய் கனவுச்சிதைவுகள் ..
நடக்க பழகும் முன்னே குழந்தை மனம்
மாற்றுதிரனாளியாய் மாற்றப்படும் கொடுமைகள்..
தவறென்று அறிந்தபின்னும் , தன்மானம்
அடகு வைக்கும் கோழைகளின் கூடாரங்கள்...
பொருள்மட்டும் இருந்துவிட்டால்
பொய்யுரைத்து பெருமைபேசும் அடிமைகள்...
அராஜகம் அகங்காரம் நிறைந்துவிட்டால்,
ஆட்சி அதிகாரம் கிடைத்துவிடும் அநீதிகள்..
பிஞ்சிகளை பிழையான கண்ணூடே..
காமுகன்கள் நடமாடிடும் நரகங்களாய் கூடங்கள்..
ஜாதி மதம் தீண்டாமை பலமுகமூடிகள்
தலைமையேற்கும் தரங்கெட்ட தீவிரவாதங்கள்..
கொடுமைகளாய் மாறிப்போன மயான
பூமிப்பந்தின் மீதினிலே மனிதத்தை தேடுகிறேன்.....



- கவிதை பூக்கள் பாலா

வார்த்தைகளும் இனிக்குதடி

இதயக்கூட்டில் ஓருணர்வு,
உருளாத உருண்டையாய்
சிக்கித்தான் தவிக்குதடி....
ஏன் என்ற கேள்விக்கணை
எட்டி எட்டி உதைக்குதடி...


உளறாமல் சொல்லெடுக்க
முடியுமா என்னவளே !
உன் வார்த்தை செவிமடுக்க
இடைவிடாது செவி தவித்ததடி....



காகிதங்கள் கதைத்த காலம்
கடந்தேதான் போனதடி..
கண்ஜாடை காட்டுவதையும்
கண்ணெதிரே காட்டிடும் யுகமடி...


ன்நினைவை திரையிட்டு
நிமிடங்கள் கடந்ததடி...
காட்சியெல்லாம் நிழலாக
நிசம் காண துடிக்குதடி...


லியற்ற கனவுகளும்
உன்குரல் கேட்கத் தூண்டுதடி
ஓயாத உன்நடையும் இப்போ
ஓய்வெடுக்க வைத்ததடி..


புரிந்து தான் தெளிகிறது
புலம்பிய இதயம் இப்போ...
வந்துவிட்டேன் உன்னிடத்தில்
இதழ் சொட்டிய தேனாக
வார்த்தைகளும் இனிக்குதடி

- கவிதை பூக்கள் பாலா

Saturday, January 3, 2015

இயற்கை :-


பிறவி தாய்க் கொடுத்ததடா !,
வாழ வைப்பது நாங்களடா !,
இதை புரிந்துக்கொள் மானிடா !,
இல்லை சிதைந்து நீபோவாயடா !


- கவிதை பூக்கள் பாலா

என்னுள் துளிர்க்க வா :-



விழிகளின் ஓரம் ஈரம்,
உன் நினைவுகள் தரும் பாரம்,
கனவுகளைத் தொடும் மாற்றம்,
தரும் வலிகளில் இதய போராட்டம்.....



நினைவுகள் கெக்கிலிட்டவித்துக்களாய்
பிழிந்து விழிகளில் கசியுதடி....
மழைத்துளி மண்தொட்ட மாற்றமாய்
மனம் கலங்கித்தான் போகுதடி......

ன் ஒளித்தந்த நிலைக்கண்ணாடி
பிம்ப நிழலுமற்றுப்போனதடி....
உன் உருவான தலையணையும்
எனை தவிக்கத்தான் வைக்குதடி...

ன்னுள் அன்பின் நீரூற்றாய்
இதயம் நிறைக்க வா...
வீழ்ந்திட்ட உணர்வு விதையை
விருச்சமாக என்னுள் துளிர்க்க வா....
- கவிதை பூக்கள் பாலா