என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, December 20, 2010

கருவிழி
















இமை காவலர்களின் துணை ஊடே
தளிர் போன்ற கொடி இவள் நீந்தி பழகுகிறாள் ,
பளபளக்கும் மேனியாள், பார்ப்பவரை காந்தர்வம் செய்திடுவாள் ,
காவலுக்கும் இடையிடையே பல பார்வை பதித்திடுவாள்,
சொக்கி போகும் சுழல் பார்வை , சுட்டு விடும் சுடர்பார்வை ,
கள்ளத்தனம் காட்டியே , காரியத்தை சாதித்திடுவாள்,
குழந்தையான குறுகுறுப்பில் குஷிதனை காட்டிடுவாள் ,
காந்தர்வ அம்பை எய்தி காதலையும் கவர்திடுவாள் ,
சுடும் தீயை உட்கொண்டு உமிழ்ந்தும் தாக்கிடுவாள்
பிறர் துக்கம் தனதாக்கி தாரை தாரையாய் வடித்திடுவாள் ,
இன்ப மிகுதியில் குதித்து தண்ணீரை கரையேற்றிடுவாள் ,
துன்பத்தில் துவண்டு குளத்தையே வற்ற செய்திடுவாள்
எத்தனை பதிவுகள் தன்னுள்ளே பதிந்தாலும் , அதில்
காதலியை மட்டும் இதயத்தின் வடுவாக செதுக்கிடுவாள் ,
இதனையும் செய்திடுகிறாள் ........
இமை காவலர்களை ஏய்த்துவிட்டு ..........
எனக்காக என் கரு விழியாள் .........
- பாலா

No comments:

Post a Comment