என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, December 16, 2010

ஒரு வரி கவிதைகள் ......

                 லஞ்சம்
கேட்காத கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கும் பக்தர்களே !
கேட்கும் எங்களுக்கு கொடுக்க மறுப்பதேன்
( லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் )
                 சுகம்
காத்திருப்பது சுகமென்றார்கள் காதலிலே !
என் சமாதி வரை காத்திருப்பது கொடுமையானது !

                 காதல்
நானும் அழகானேன் ........
என்னை ஒருவள் காதலித்தபோது .......

               அழகு
அழகே உனக்கு  முகவரி உண்டா ?
ஆனால் முடிவுரை உண்டு ........

                 காதல்
யுத்தமின்றி, இரத்தமின்றி எனை வெற்றி கொண்டாள்
சிறு புன்னகையிலே ............

         சோம்பேறி
உலகம் என்னகொடுத்தது, கேட்டுகொண்டே இருந்தான்
கேட்காமலே மரணத்தை கொடுத்துவிட்டது .......  

          பெருச்சாளி
எங்க வீட்டு சுரங்க தொழிலாளி
        இன்றைய குழந்தை
புதுக்கவிதை ஆங்கிலம் படிக்கின்றது

       நட்சத்திரங்கள்
நிலவு பெண்ணை வாழ்த்தி,
இயற்கை தூவிய பூக்கள் .......

       கடல்
நிலவு பெண்ணே !
நீ வடித்த கண்ணீர் தானோ !
                                              - பாலா 

No comments:

Post a Comment