என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்த நாள்

வில்லனென்று நீ மலர்ந்தாய் ,
வீறுகொண்டு உருமாறினாய் ,
உலகம் உன்னை நாயகன் என்றது,
நன்றி என்று நீ வினவினாய் ,
நாடே உன்னை உச்சத்தில் வைத்திருகின்றது ,
நடிப்பில் சூரன் இல்லை என்று சொன்னவர்,
வாய்பிளக்க வைத்தவன் நீ ,
வணக்கத்தோடு நீ நடக்கும் பாதை
முள்ளில்ல எங்க இதய நீரோடை ,
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களும்
உண்டு உன் வாழ்வில் ,
ஏமாற்றாமல் நீ இருந்ததால் -நாங்கள்
உன்னை வைத்தோம் உச்சத்தில்,
உருண்டவன்னெல்லாம்
உலகை ஆள நினைக்கும் போது,
நீ மட்டும் உண்மையாய் இருந்தாய் ,
ஊருக்கு பகட்டாய்
சிம்மாசனத்தில் அமராமல்,
கடவுளுக்கு கைகாட்டி சென்றாய் .
அவனுக்கு தெரியும் உன் மனது
அதனாலேயே இன்றும் நீ அணியவில்லை
அரசியல் வேடம் ..............
பல நூறு படங்கள் நீ நடித்தாலும்
உனக்கு வயது மட்டும் இன்னும்
பின்னோக்கி செல்வதன் மாயம் என்ன ?
அதனாலேயே சொல்கிறேன்
மீண்டும் மீண்டும் குழந்தையாய்
எண்கள் இதயத்தில் பிறப்பாய் .
வாழ்க பல நூறாண்டு என வாழ்த்த
எங்களுக்கு வயதுண்டு -காரணம் ,
என்றும் நீ குழந்தையாய் எங்கள் மனதில்.............
- பாலா









No comments:

Post a Comment