என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, December 18, 2010

ஒரு வரி கவிதைகள் ( அப்படின்னு நினச்சிகனும் )


பயப்பதாதே ! நான் தான் சொல்லிட்டேனே , விதியேன்னு படிப்பாங்க, நம்ம நண்பர்கள் தான் யாரும் அடிக்க மாட்டாங்க ..........

மனிதம்
பூவே புன்னகைக்காதே !
ஆணவம் என்று அழித்துவிடும் மனித இனம் .....

கற்பூரம்
மனிதனுக்காக கடவுள் முன் தீக்குளிக்கும்
ஏமாளி தொண்டன் ..........

காந்தி
அகிம்சையை சொல்லிவந்த காந்திக்கே
அதில் நம்பிக்கை இல்லை போலும் .......
கைத்தடி துணைக்கு தேவைபடுகின்றது ....

தேவை
உள்ளத்தில் தேவை அன்பு ...
உடலுக்கு தேவை உயிர் ..
உயவிர்க்கு தேவை தன்னபிக்கை .....

வழுக்கை
விதைத்தாலும் விலையால தரிசு நிலம் ..

கண்ணீர்
இதயம் அதிகம் உழைக்கும் போது
கண்கள் வடிக்கும் வியர்வை துளி ....

வாழ்க்கை நியதி
மண் பெற்றெடுத்த உயிர்கள்,
மனிதனுக்கு இறையாகின்றது ........
மனிதன் பெற்றெடுத்த உயிர்கள் ,
மண்ணிற்கு இறையகின்றது ........
- பாலா

No comments:

Post a Comment