என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, January 14, 2015

''பொங்கலோ பொங்கல் ''

''பொங்கலோ பொங்கல் ''
வாழ்த்துக்களோடு உங்கள்
  கவிதை பூக்கள் பாலா
-------------------------------------------

பழையன கழிதலும், புதிய புகுதலும்
போகிப்பண்டிகையாய் அன்று. ....
கொண்டாட்டத்திற்கு எரித்தலும்,
ஓசோனில் ஓட்டையுமாச்சி இன்று...

கொண்டாட்டம் வேண்டும்
வடிவம் மாற்றலாமே !
வீதியை ஊரை நாட்டை
தூயமையாக்கலாமே இன்று
சேர்ந்து கொண்டாட்டம்
போடலாமே நன்று....

தமிழனில் திருநாள்
உழைப்பவன் பெருநாள்
விவசாயின் பொன்னாள்
விளைச்சலின் திருநாள்
கதிரவன் மகிழும்நாள்
வணங்கி போற்றும்நாள்

பொங்கலோ பொங்கல் என்றே
மனதிலும் சந்தோசம் பொங்கும் நாள்..
தமிழனின் கொண்டாட்டங்களில்
என்றும் முதன்மையான
பொங்கல் திருநாள்......

பொங்கலோ பொங்கல் என்று
ஆனந்தம் பொங்கட்டும்
தமிழன் தலை நிமிரட்டும்
விடியல் பிறக்கட்டும்
புதுப்பானை படையலும் போல
புதுமைகள் சிறக்கட்டும்,
குடும்பங்கள் தழைக்கட்டும்
சந்தோசம் பெருகட்டும்..........

வாழ்த்துக்களோடு உங்கள்
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment