என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, November 10, 2010

பூங்காவனம்















பூக்கள் புன்னகைக்கும் பூங்காவனம்
பசுமையை போர்த்திநிற்கும் பஞ்சவர்ணம்
சோர்வுகள் சூம்பிவிடும் சுந்தரவனம்
கண்கள் குளுமைபெறும் குமரியினம்
குயில்கள் இசை நடத்தும் இன்பவனம்
நண்டுகள் நடனமாடும் நந்தவனம்
வண்டுகள் பசிதீர்க்கும் காமவனம்
தென்றல் தாலாட்டும் தாய்வனம்
காதலர்கள் காதல் பயிலும் காந்தவனம்
பல கவிதை படைத்திடும் கலைவனம்
வறியவர்களையும் அரவணைக்கும் வசந்தவனம்
இயற்கை சொந்தம் கொள்ளும் சொர்க்கவனம்
- பாலா

No comments:

Post a Comment