இதயம் துடிக்கின்றது,
உடலும் நடிக்கின்றது,
பொய்யுடல் இதுவென்றரியாமலே.
மருத்துவங்கள் ஓதுகின்றது,
தோழமைகள் கருணை
மழைபொழிகின்றது,
உறவுகள் உருகிப்போகிறது
பொய்யுடல் இதுவென்றரியாமல்..
நெடுவானம் நிர்மூலம்,
கதிரவனும் கருகிபோய்,
தென்றல் பேயிரச்சல் புயலாய்,
பூக்களும் கொடுவாளோடு,
கண்ணீர் கடலை மிஞ்சி,
வார்த்தைகள் அர்ஜுனன்
போர்க்கோல காண்டீபமாய்,
என் இதயம் சல்லடையாய்.
கனிவில்ல காதலாம் என்காதல்
உணர்வில்லா போனதாம் உயிர்க்காதல்,
காதல் அகராதியறியாமல் பிதற்றகள்,
முடிவு செய்துவிட்டு முகவரிதேடுதல்
பிரிவின் ஓர் இலக்கனமோ.
பறிக்கொடுத்த இதயத்தை
பிரபஞ்சத்தில் எங்கு தேடுவேன்
கருனையற்று நீ அறுத்தெறிந்த
காதலைக் கொன்று
நடைப்பிணமாய் அலையவிட்டு
ஆனந்தம்கொண்டாயடி.
வாழ்வுமுடியவில்லை நானறிவேன்,
வாழ்கையாதென்று தெரியேன்இனி
பயணம் முடியும் மட்டும் தொடருகின்றேன்.
துணையாய் அவள் நினைவுகள்
வழியாய் அவள் வசவுகள்....
தொடர்ந்திடுமா வாழ்க்கைஇனி......
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment