காதலிக்கும், காதலனுக்கும்
வார்த்தை போர் ,
யார் காதல் பெரிதென்று.
உனை அரை நிமிடமும் அகலேன்
உன் நினைவையும்விட்டு விலகேன்
புரியாதவன -காதலி,
உன் சந்தோஷம் பெரிதென விரும்பி
உனை சுற்றும் பக்தன்
நான் காதலன.
வார்த்தைகள் கனல் கொண்டு
காதல் பேர் ஆயுதமின்றி,
பார்த்துக்கொண்டிருந்த
வன ஈக்கள் பரிதாப்பட்டு
நாட்டமை செய்ய
முடிவெடுத்து.பிரதிட்டு
கூட்டியது விசாரணை சபை...
காதல் யாதென்று புரியா
நீங்கள் எப்படி காதலர்
முதற்கேள்வியே
மூச்சு திணறல்,
வாதங்கள் விதவிதமாய்
அவர்கள் ஒருவர்மேல்
வைத்த காதல் உச்சம்
வைத்து வாதிட்டனர்,
வனம்முழுக்க ஆர்வம்
தொற்றியது நாட்டமை
தீர்ப்பு யாதாகும்
தனிவிவாதம் நடந்தேறியது.
தீர்ப்பு சொல்ல ஈக்கள்
நாட்டாமை(ராஜா) தொண்டை
கனைத்து ரீங்காரம்மிட்டார.
யாது தவறென்று புரியா
காதல் அன்பர்களே!,
உங்கள் காதல் பொய்யல்ல
விதமே பரிதாபம், ஏக்கத்தோடு
இளம் ஜோடிகள்........
காதல் யாதெனறிவாய் முதட்
காதல் எப்படி தனிமைப் பட்டது,
என்காதல்.. என் காதல்..
சிவந்துமுகத்தோடு
கருணை விழியோடு தொடர்ந்தார்.
அன்பு பரிமாறிய பிறகே
காதல் என அறிவீர்களா?
ஒன்றான இதயம் ,உணர்வு,
ஏன் தனிமைப் பட்டது.
நம் காதல் என்ன ஏன்?
அறியாய் ..........
நிசப்தம் நிலைத்து நின்றது,
தொடர்ந்து தீர்பெழுதிய
வார்த்தை தொடர்ச்சி..
நான் விடுத்தது நம் காதல்
நாம் என்செய்வோம்
விவாதம் புரிதல் அன்பொழுக
அரவணைத்து நம் காதலாய்
பாருங்கள் உணருங்கள்.
நம் காதல்உயிர்த்தேவை
யாதென சினுகுங்கள்,
காதல் அறையில்
வஞ்சிக்கா சிறைப்பட்டு
வளமோடு வாழ்வீர்
காதல் ஈரிதயம்
ஓர் உணர்வு கொண்டது.
வார்த்தை முடித்து
கம்பீரம் மிடுக்கோடு
காதல் சுவையறிந்த
நல்லோனாய்
தேணீ நாட்டமை......
பலத்த கரவோசை
காதலோடு கவிபடித்து
இணைத்த உள்ளம்
கனிந்த காதல்
இனி ஏது பிரிதலிங்கே........
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment