என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 11, 2014

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment