என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, November 30, 2010

கடலலை



















சீற்றமுடன் சீறிவரும் கடலலையே !
சினம் தணிந்து திரும்புவதேன் !
கஜினி போல் போர் தொடுக்கும் கடலலையே !
கரையை வெற்றி கொள்ளாமல் வீழ்வதேன் !
காற்றின் இசைக்கு நடனமாடும் கடலலையே !
சில நேரங்களில் மக்களை சீண்டி பார்ப்பதேன் !
பயந்தவனுக்கு பூச்சாண்டி காட்டும் கடலலையே !
மதியாதவனுக்கு மண்டியிடுவதேன் !
நண்டுகளுக்கு கரைகாட்டும் கடலலையே !
நடுங்கியவனுக்கு நடுகடல் காட்டுவதேன் !
கரைக்கு மணற்பரப்பும் கடலலையே !
கவிஞ்சர்களுக்கு கற்பனை வள்ளல்லாகிறாய் !
உன் ரசிகனுக்கு தென்றலாகும் கடலலையே !
அழிவில்ல அமிழ்தத்தை உன்னுள்ளே பெற்றவளே !
அழகுடன் ஆர்பரிக்கும் கடலலையே !
ஆனந்தத்தில் புத்துயிர்பெரும் மனித உள்ளமே ! - பாலா

No comments:

Post a Comment