என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, January 13, 2011

தோழமைக்கு கொடுத்த (தொடுத்த ) பரிசு




















பரிசு கொடுக்க விரும்பினேன் தோழியே !
பலநூறை புரட்டி விட்டேன் ,
புரண்டு புரண்டு அழுது விட்டேன்.
விடை தெரியாது , விழி பிதுங்கி
கனநேரம் கண்ணயர்ந்தேன் , கனவிலும்
புன்னகைத்தாய் ! பரிசெங்கே என்றேதான்.

உன் புன்னகையின் ஒளியினிலே
புது ஞானம் பிறந்தடி தோழியே !
கவிதையின் ஊடே நம் நட்பு பிறந்ததால்
கவிதையை பரிசளித்தால் நலமன்றோ தோழியே ! ,
முழுமையாக முடிவெடுத்து ,
கவிதை தொடுக்க முனைதேன் தோழியே !.

என் தமிழில் வார்த்தைகள் பஞ்சமில்லை என்றாலும் ,
உன்முன்னே என் கற்பனை பஞ்சமானதடி தோழியே ! ,
பலம்கொண்டு பலமுறை, என்தமிழ் வார்த்தைகளை
பிரசவித்தேன் ஆனந்த வலிகொண்டே தோழியே !.,
ஆனாலும் ஏனோ இடை மறித்து பல்லித்தது ,
உன் அழகிற்கு இணை இல்லை என்றேதான் தோழியே !

பல தவங்கள் புரிந்தே பின்னே , புலப்பட்டது யாதென்று ,
உனை வர்ணிக்க இந்த ஒற்றை வரிபோதுமென்று தோழியே !
''என் தமிழ்தாய் ஈன்றெடுத்த தலை
பிரசவ குழந்தையடி நீ !''

ஆயிரமாயிரம் வார்த்தைகள் சொல்ல இயலாததையும்,
சிற்பியாலும் செதுக்க முடியாத சிற்பத்தை ,
இந்த ஒற்றை வரி சொல்லி இருக்கும் ,
நீ யார் என்றேதான் தோழியே !

இன்னுமா! புரியவிலை என் தோழியே !,
தலை பிரசவ குழந்தையை காணும் தாய்க்கு,
துச்சமடி உலகில் கிடைக்கும்(கொடுக்கும்)
பொருளனைத்தும் தோழியே !,
மறக்க முடியா பரிசு..........
இதுவல்லவோ !
என் அழகு தோழியே ! .....
- தோழமையுடன் கவிதை பூக்கள் பாலா

குறிப்பு : என்னிடம் பரிசு கேட்ட தோழிக்கு , நான் வடித்த கவிதை பரிசு
இதற்கு என் தோழியின் பதில் என்னவாக இருந்திருக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போன் .

..

No comments:

Post a Comment