என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, February 15, 2011

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு - 2

தொடர்வண்டியில் துடித்த இதயம் - துடிப்பு -1


கண்களாலே
கவிபடித்த என் இதயம் ,
புரியாத இன்பத்தில் ஆனந்த கூத்தாடியது .
தழதழக்க நினைத்த நாவிற்கு ,
தடையுத்தரவு போட்டது உள்மனது .
குயிலே குரலெடுத்து கூவமாட்டாயா ?
ஏங்கி தவித்தான் என் சேவியேன் .

செவ்விதழ்கள் நடனமாடி செந்தேனை
வார்த்தையாய் வடித்தாள் செந்தாமரை..
உணர்வுகொண்ட என்செவியோன்
சிந்தாமல் கையேந்தி,
தன்னகத்தே பதுக்கிக்கொண்டான் .
" பூங்கா நகரம் எத்தனை நிறுத்தம் அடுத்து வரும் "
இதுவே தேவதை இதழ்கள் வடித்த தேனின் சுவை .
பதிலுரைத்தேன் பாதி நினைவில்
அடுத்த நிறுத்தம் " என்று .....
பதிலுக்கு மின்னலாக வெட்டிச்சென்ற
தேவதையின் புன்னகை,
மின்னலின் மின்சாரமாய் .....
"இடையில் கோட்டை நிறுத்தம் வரும்மல்லவா ? "
வஞ்சி கொடியாள்,
வார்த்தையால் தர்க்கம் செய்தாள் ...
பெண்ணே உன் இடையழகால் கோட்டை என்ன ?
கொடிகளும் உன் பாதம் தழுவும் ,
என் நினைவலைகள் ..
கற்பனையில் தடம் புரண்டது ....
கொடியிடையாள்,
நெற்றியில் கடலலைகளை உருவாக்கி ,
என் பதிலுக்கு காத்திருப்பது புரிந்தது ...
"ஆம் " என்றே நாணத்தில்
தலையசைத்துப் புன்னகைத்தேன் .

பாலைவனத்தில் பயணிக்கும்,
இரண்டு ஒட்டகத்தின் நிலைதானோ ......
இடைஞ்சல் இல்லா இந்த அறை.
என் வார்த்தை பூக்களைத் தொடுத்து,
வஞ்சியின் கழுத்தில் மாலை சூட நினைத்தாலும் ,
அழகின் அழகு மயக்கத்தில் வார்த்தைகள் தடுமாற ...
உள்ளம் உள்ளுக்குள்ளே போரிட்டது.......
என்ன என்று வினவியே,
வில்வித்தை செய்தாள் தன் விழியால் ...
- இதயம் தொடர்ந்து துடிக்கும் .....
- கவிதை பூக்கள் பாலா ...

No comments:

Post a Comment