என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, May 31, 2011

என்றும் மாறா உறவானவளோ .....


தங்கை அவள்,
என்றும் அண்ணன் மடியினில் தவழ்ந்திடும் மழலையோ !
பல மாற்றங்கள் அவள் வாழ்வில் கண்டாலும்,
மாறாத உறவின் பாலம் ஆனவளோ !
தங்கை எனும் வார்த்தையிலே ,
உயிர் தாங்கி நிற்கும் உன்னத உறவானவளோ !.
கொடிய கண்களையும் தட்டி வைக்கும்,
நம்பிக்கையின் எல்லை கோடானவளோ .......
உள்நாட்டு பேரினை போல்,
என்றும் முடிவில்லா (செல்ல) சண்டை இடுபவளோ !.
அடுத்தவன் சாடினாலே - அண்ணனின்
போர்ப்படை தளபதியாய் தங்கை மாறிடுபவளோ ! ,
மிட்டாய்க்கு சண்டையிட்டு - பின்
விரல் பிடித்து பள்ளிசென்ற காலமும் முதற்கொண்டே ,
உற்றதோழியும் அவளே !, உயரிய பாசமும் அவளே !
அடுத்த தெருவில் காதல் அம்பை எய்த அண்ணனையும்,
தனை நோக்கிடும் அம்புகளை ஒடித்திடும் வீரனாகியவளோ ! .
கரம் பிடித்து கொடுப்பவனை , கால் தொட்டு வரவேற்றிடும்
மனவலிமை கொடுத்திடும் பாசத்தின் முழுமையானவளே !
அண்ணன் இல்லத்தரசியை இணைபதிளும் முதன்மையானவளோ !
தான் ஈன்ற குழந்தைக்கு உலகில் - அண்ணனை
முதன்மை உரிமை உறவாக மாமனாகி மகிழ்ந்தவளோ !
ஒரு வயிற்றில் மலர்ந்து இருமலராக வாழ்ந்தாலும்,
மனதில் காதலாய் இன்னொருவன் இருந்தாலும்,
என்றும் உன்னதமாய் இதயத்தில் ஓர் உறவாய் வைத்தவளோ !
வாழ்விழந்து போனாலோ ,
கொண்டவன் கொடுங்கோலனாய் மாறினாலோ ,
என்றும் காக்கும் துணையாய் அண்ணனை நினைபவளோ !
உலகில் பயணம் முடிந்து போகும் வேளையும்,
அண்ணன் பட்டுடுத்தி அழகா பவனி செல்பவளோ !
மலர்ந்த நாள் முதல் அண்ணன் தோல்சுற்றி
வலம்வந்து உலகில் என்றும் மாறா உறவானவளோ !
(அண்ணன்)தங்கை .............

அண்ணன் தங்கை பாச உணர்வுக்கு
என் இந்த கவிதையை
பரிசாக கொடுக்க விரும்புகிறேன் ..........

கவிதை பூக்கள் பாலா....

No comments:

Post a Comment