சிரத்தை உயர்த்து சிறப்பினைப் அடைவாய்
விழியை சுழற்று விண்ணையும் அறிவாய்,
செவிமடுத்திடு உலக ஞானம் பெறுவாய்,
சுவாசம் உணர்ந்திடு மனிதவாசம் உணர்வாய்,
நாவை அடக்கு நல்வாழ்க்கை வாழ்வாய்,
வார்த்தை சுறுக்கு வளமுடன் திகழ்வாய்,
வாயின் சிலபூட்டு சிறப்பெனத் தெளிவாய்,
நெஞ்சை நிமிர்த்து நெஞ்சுரம் கொள்வாய்,
கரங்களை நீட்டு கருணையைக் காண்பாய்,
இதயத்தை திறந்திடு அன்பினில் நிறைவாய்,
நடைதனை போட்டு கண்டங்கள் இணைப்பாய்,
பாதம் தாய்மண்னை தொட்டால் நிம்மதியடைவாய்,
மனஉறுதியை பெற்றால்தன்னம்பிக்கைப் பெறுவாய்,
இவையனைத்து இருந்தால் மனிதம் காப்பாய்........
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment