என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Sunday, January 11, 2015

மனிதத்தை தேடுகிறேன்...

விந்தைகள் நிறைந்த உலகில்
விரைந்து தான் நிகழ்வுகள் அரங்கேற்றம்...
இமைக்கும் இடைவெளியில்
இல்லாமல் போகும் மனித உரியினம்....
கண்விழிக்கும் விடியல் முனே
கண்ணாடி சில்லுகளாய் கனவுச்சிதைவுகள் ..
நடக்க பழகும் முன்னே குழந்தை மனம்
மாற்றுதிரனாளியாய் மாற்றப்படும் கொடுமைகள்..
தவறென்று அறிந்தபின்னும் , தன்மானம்
அடகு வைக்கும் கோழைகளின் கூடாரங்கள்...
பொருள்மட்டும் இருந்துவிட்டால்
பொய்யுரைத்து பெருமைபேசும் அடிமைகள்...
அராஜகம் அகங்காரம் நிறைந்துவிட்டால்,
ஆட்சி அதிகாரம் கிடைத்துவிடும் அநீதிகள்..
பிஞ்சிகளை பிழையான கண்ணூடே..
காமுகன்கள் நடமாடிடும் நரகங்களாய் கூடங்கள்..
ஜாதி மதம் தீண்டாமை பலமுகமூடிகள்
தலைமையேற்கும் தரங்கெட்ட தீவிரவாதங்கள்..
கொடுமைகளாய் மாறிப்போன மயான
பூமிப்பந்தின் மீதினிலே மனிதத்தை தேடுகிறேன்.....



- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment