என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Thursday, January 29, 2015

''மாதம் மும்மாரி பொழிகிறதா''


ண்ணில் விதையிட்டு
காத்திருக்கும் விவசாயி...
நீத்துளி வேண்டி வர்ணனுக்காய்
ஆகாயம் நோக்கும் விவசாயி..
காலம் அறியா கண்ணைதிறக்கும்
இயற்கையின் அழிவு( மாற்றங்கள்),
அழிக்கும் வேதிநச்சுகளுக்கு
முளைக்கும் குதிரைகொம்புகள்..
அரசுகள் மாமனர்களாய்,
''மாதம் மும்மாரி பொழிகிறதா''
வெட்கங்கெட்ட வினவல்கள்...



தைக்கும் அந்நியனிடம்
அன்டிபிழைக்க வைக்குதடா,
ஆகாயம் தொலைந்து, பூமியும்
அண்டை மாநிலமும் கதவடைக்கிறதடா,
காய்ந்த வைற்றோடு
காக்காணி நிலத்தையும், காடுமேட்டையும்,
கட்டாந்தரையாக்கி கோடுபோட்டு
கலர்கலரா விற்பனை என்றார்களடா....
வி


மான்னியத்த வெட்டுவாங்க,
அப்புறம் எங்களையும் கொட்டுவாங்க.
மீத்தேன்னு முடிச்சி வச்சிடுவாங்க...
சேத்துக்கு அலைவீங்க,
கழுவ காகிதமும் பழகுவீங்க,
அதுக்கு காட்டையும் அழிப்பீங்க,
உங்கள வனவிலங்கும் அழிக்கும்,,
மனித சண்டை போய். மீண்டும்
மிருக சண்டை ஆரம்பம்...
அப்போ காட்டுல, இப்ப நாட்டுல...


வருத்தத்தோட எச்சரிக்கும் :
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment