என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, January 14, 2015

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன் :-



தரணி போற்றும் தமிழனே
தலைநிமிந்து நில்லடா.....
எதிப்போனை துச்சமாய்
மனதில் கொள்ளடா !


வாழ வைப்பவன் தமிழனடா
தன்மானம் உள்ளவன் நாமடா!
வீரம் செறிந்தவன் தமிழனடா!
வீண்பழி சுமப்பவனும் தமிழனடா

சுற்றி வளைத்தாலும் ,
வஞ்சகம் செய்தலும்,
சுரண்டி தின்றாலும் ,
மீண்டு எழுபவன் நாமடா...

சுயஅறிவு உள்ளவன் தமிழனடா
அதனாலேயே ,
ஒற்றுமை அழிவதும் வீனடா,
நடிப்பில் ஏமாறுவது ஏனடா,
குடியில் உன்னை அழிப்பது
சரியோ சிந்திப்பாயாடா....

அரசியல் அறம்கொன்று
வாழ்பவனை அரியணையில்
விடுவது முறையோ முழிப்பாயடா...
சுற்றி வளைத்து நின்றாலும்
வாள்சுற்றும் தீரனடா..
பொருளுக்காய் புகழ்பாடு
பரதேசிகளை சுற்றி பாரடா..
மயக்கம் இன்று ஏனடா
மறதமிழன் என்றும் நாமடா....


சூதுசெய்பவன் தலைவீழும்
காலம் கனியுதடா- இன்னும்
கலக்கம் நெஞ்சில் வீனடா
வாழ்வோம் நாம் தமிழரென்றே
காப்போம் என்றும் ஒற்றுமை
எழுவோம் வீறுக்கொண்டு
விடியல் நம் விரல் நுனியில்....

தன்மானம் உயிரென திமிர்பிடித்த ஒரு தமிழன்
- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment