என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, May 20, 2011

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 3

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 1

தொடர் வண்டியில் துடித்த இதயம் - 2

சூரிய விழியின் சுடாத ஒளிக்கதிரை
சுகமாக உள்வாங்கி சுகந்தமான நிலவானேன் ,
விழிகள் மேல்செல்ல , அவளை தழுவியதால்
காற்றும் தென்றலாக என் உணர்வுகள் உள்வாங்க ,
அவளிட மண்டியிட்ட என் விழிகள்
விரைவாக தஞ்சம் புகுந்தது என்னுள்ளே,
கால்கள் மெல்ல நடைப் போட்டு நடை பழகினாலும் ,
விடைபெறாத என்கருவிழிகள்
விவரமாய் ஆராய்ந்தது அவள் அழகை ,
பறக்க துடிக்கும் முடியிழைகள், அவற்றை
மெல்ல தழுவி அரவனைக்கும் அவள் கரங்கள் ,
வடிந்து வீழாத சாயப்பூச்சு ,
கண்கள் உறுத்தா கண்மை அளவு ,
காதுகளில் ஊஞ்சலிடும் செயற்கை காதணிகள் ,
ஆவி அனைத்து விளையாடும் தங்கச் சரடு ,
மேனி அழகின் பாதுகாவலனாய் தவம் செய்த சுடிதார் ,
மணிக்கட்டில் காலம் சொல்லும் கை கடிகாரம்,
விரல் இடுக்கில் மகுடமாய் பகட்டு மோதிரம் ,
தோளில் கை கோர்த்து, இடையை வலம் வந்து
மடியில் தலை வைத்து உறங்கும் தோள்பை ,
கால்களில் கட்டுண்டு , கால்தொட்ட மமதையில்
சிரித்து சிரித்து சித்தரவதிக்கும் கால்கொலுசு,
தேவதையை சுமந்து பரவசமடையும் பாதணிகள் .
முழு நிலவு வந்ததால் முழுகி போன சூரியனும் ,
அதையும் தடுத்து விட மேகம் மிதமாக குடைபிடிக்க
கண்களில் பழைய காஷ்மீரை கண்டேன் .
விழிகள் துளை இடுவதை கண்டும் சிரித்தே
சிறைபடுத்தினால் என் உணர்வை ......
இதயம் தொடர்ந்து துடிக்கும் ........
கவிதை பூக்கள் பாலா ..
.

2 comments:

  1. partha mathirathil paavaiyin algai pakkuvamai padapidithulleerkal, aval padithal ananda koothiduval.valthukkal.

    ReplyDelete
  2. Karthick @
    thanks u friend unkal vazhthukkalukkum , varukaikkum

    ReplyDelete