என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Wednesday, December 31, 2014

2014 திருமகளே... பிரிய விடைகளோடு

வினவாத இரவும் வினவிய ஆண்டு,
வாழ்வின் விளிம்பையும் உணர்த்திய ஆண்டு,
கொல்லவும் பிழைக்கவும் வைத்த ஆண்டு,
ஏமாற்றமும், மாற்றமும் நிறைந்தாண்டு,
வலிகளும் நம்பிக்கையும் தந்த ஆண்டு,
உறவுகளின் தரம்புரிந்த இன்னொராண்டு,
நட்பும் நடிப்பும் விளங்கிய மற்றொராண்டு,
கனவுகள் நிசத்தை நோக்கிய ஆண்டு,
குருட்டு நம்பிக்கை குதறிய ஆண்டு,
நிறைந்த நல்நட்புகள் மலர்ந்த ஆண்டு,
வெறுப்பும் நிறைவும் கலந்த ஆண்டு,
பணம் என்னை பந்தாடிய ஆண்டு,
இருந்தும் நம்பிக்கை தொலையாத ஆண்டு,
என் மரியாதை என்னை காத்த ஆண்டு,
வளமாய் மனம்மாற்றி கரைச்சேர்த்த ஆண்டு,
கனிந்த இதயங்கள் பூத்த ஆண்டும் நீயே
விடைப் பெறுகிறாய் வாழ்த்தினை தந்து.....
நன்றியோடு உனை மறவேன் சென்று வா


2014 திருமகளே... பிரிய விடைகளோடு
கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment