கேள்விகளை தொடுக்கும் வாழ்க்கை !,
விடைத் தேடியலையும் மனிதர்கள் ,
வேடிக்கை பார்க்கும் உலகம்,
மௌனம் காக்கும் இயலாமை
அடிபட்டுப் போகுமோ சுயமரியாதை,
பதறித் துடிக்கும் உறவுகள்,
பரிதாபம் தேற்றும் தோழமைகள்,
சிந்தனை சிறைப்பட்ட மனநிலையும்,
பரிகாசம் செய்யும் மனசாட்சியும்,
யாதென அறியா சுயஉணர்வும்,
சம்பட்டியால் அடிக்கும் தன்மானம்,
சகதியாய் தெரியும் கவலைகளும்,
அறிவுரை இயம்பும் ஆதங்கங்களும்,
பதிலுரைக்க இயலா மனவோட்டம்,
காரணம் விழையா காலமுழுமையும்,
குளத்தில் கல்லெறிந்த நிலைதானோ,
குருட்டுக்கணக்கு தகர்ந்து போது,
தன்மீதே தண்டனை ஏற்கின்றோம்,
பணத்தின் பற்று பரிகாசிக்கும்போது
தடுமாற்றங்கள் நிகழுவும் கொடுமைகள்,
வாக்குகள் தவறும் மானப்போராட்டம்
மனச்சாட்சி உள்ளான்சகிப்பானோ!
உரைப்பாய் காலமே பதிலுரையை........
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment