உருகாப் பனித்துகளின் மீதே
உருகித்தான் விளையாடிமகிழ்வோமடி
பிடிபடா வானவில்லினில் உன்
விழியம்பைத் தொடுத்துவிட்டாயடி
என்னிதயம் மயக்கிக் கொய்யும்
உன் யுத்த அழகினை கண்டேனடி....
அள்ளித்தழுவிய கனத்பொழுதினில்
எந்நிலையில் மாற்றம் உணர்ந்தேனடி,
என்னுயிர் நீயென வினவிய நொடிகள்,
ஒருகோடி மின்னல்கள்
பூக்களாய் என்னுள் பூத்தாயடி .....
- கவிதை பூக்கள் பாலா
No comments:
Post a Comment