என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Saturday, December 20, 2014

ஹரிஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :
--------------------------------------------------

கொடுப்பவன் எல்லாம் இறைவனானால்
நீயும் என்னிறைவனாவாய் என்மகனே !
முதலாய்முகம் கண்ட பொழுதினிலே
தாய்மையை என்னுள் உணர்த்தியவனே...


வலிகளை புன்னகையில் வீழ்த்தியவனே !
உன்னுளில் புதுலகம் படைத்தவனே!
என்பிறப்பை உலகில் முழுமையாகியவனே !
புதுறவில் நம்பிக்கை விதைத்தவனே !


குறும்பில் கொண்டாட்டம் கொண்டவனே !
பார்புகழ் பெற்று வாழபோகின்றவனே!
வற்றா அறிவாற்றல் வளர்ப்போனே!
வாழ்வாங்கு என்றும் வாழ்வோனே!


பரந்த மனதோடு, விரிந்த உலகோடு,
செல்வ செழிப்போடு, சுற்றம் சூழலோடு,
அன்பின் பொழிவோடு, ஆனந்த வாழ்வோடு,
உற்சாக நினைவோடு, உள்ளார்ந்த அன்போடு,
எனதுருவான உணர்வோடு,
உள்ளம் பூரிக்கும் வாழ்த்தோடு,
பல்நூறாண்டு கண்டேதான் வாழ்வாயடா..
என்னன்பே, என்னுயியே, என்செல்லாமே!
உச்சிமூர்ந்து முத்தங்கள் அமுழ்தளித்து
வாழ்த்துகிறேன் என்மகனே ! 

ஹரிஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லி
அம்மா தேவி ரவியோடு
முகநூலின் தோழமைகள் .....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment