என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Tuesday, April 5, 2011

நமக்கு பேரு ''இந்திய குடிமகன்...


தே
ர்தல் வந்து,
நம்ம வீடு வீடா தேடுது ,
தெரியாத முகமெல்லாம்
நம்முன்னே நாணுது ....

னங்கொண்ட தலைகளெல்லாம்
இப்ப தலை கீழா நடக்குது ..........
ட்டி வச்சா ஆனவமெல்லாம் ,
அடிபட்டது போல் ஆகுது ....

டங்காம திரிஞ்சதெல்லாம், ஐயோ !
பாவமுன்னு சொல்ல வைக்குது....
டக்காத கால்களெல்லாம் ,
நடை பயணம் போகுது ........

டிப்பிலே உச்சம் தொட்டு ,
நாய் நரியெல்லாம் நாடகமும் நடத்துது .....
கொசுக்கூட செல்லாத இடமெல்லாம் ,
கொடிநடையா கால்கள் நடக்குது ......

தேன் சொட்டும் வார்த்தையாலே ,
நம்ம திகைக்கத்தான் வைக்குது ........
கைவனும் இப்ப உயிர் நண்பன்னு ,
தழுவி ஊரைத்தான் ஏய்க்குது....
தெல்லாம் அரசியல்ல சகஜமுனு ,
தத்துவமா வாய் கிழியுது ........

யிரை குடித்த ஊழலெல்லாம்,
உலகெல்லாம் நாருது.......
நாற்றத்தின் நடுவிலேயும் ,
பழிவாங்கல் இதுவென்று ,
நமட்டு சிரிப்பு சிரிக்குது .....

வீழ்ந்த மக்களை எல்லாம் ,
விலை கொடுத்து வாங்குது....
னம் பொறுக்கா கதரியோரை,
காவல் கொண்டு குடையுது ....

டமையை சாதனை என்று ,
தம்பட்டம் தான் அடிக்குது ,,,,
தை கூட செய்யாத சிலது ,
குறை சொல்லி திரியுது .......

குற்றங்கள் பல செய்தால் ,
குத்தகை வேட்பாளர் ஆகுது ,,,,,
டிச்சதுல சில்லறைய ,
செலவினமா காட்டுது ......

வேண்டியவன் இவனென்றும் ,
நம் இன, மதத்தோன் இவனென்றும்,
நம்மளும் ஓட்டு போடுது ........
போட்ட பின்னாடி, அடிமை என்றே
எண்ணி வாடுது ........

வாக்குறுதி எல்லாம் இப்ப ,
வக்கற்று போகுது .......
நாதியற்ற நாட்டுல ,
நமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;......
---
பேச தெரிந்தும் ஊமையாய்
கவிதை பூக்கள் பாலா

1 comment:

  1. //நாதியற்ற நாட்டுல ,
    நமக்கு பேரு
    ''இந்திய குடிமகன் ;;.....//


    நச்சுன்னு இருக்கு...! சூப்பர் நண்பா...! வாழ்த்துக்கள்....!

    ஸ்ரீதேவி பதிவுகள்'ல உங்களுடைய கமேண்ட பார்த்து நேர இங்க வந்து விழுந்துட்டேன்...! இப்போ பின் தொடரேன்...!

    ReplyDelete