என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Monday, January 10, 2011

நாவரசி (நிர்வாண நடனம் )


மெகா இரண்டு வாயிற் கதவுகள்
பாதுகாக்கும் நடன அரங்கில் ,
முப்பத்தி இரண்டு காவலர்கள்
சுற்றி தீவிர சோதனையிட,
பார்த்து பரவசப்பட ஜொள்
பார்வையாளர்களை அனுமதிட ,
நீண்ட பதுங்கு குகைக்குள்ளிருந்து
நிர்வாண நடனமாடுகிறாள் நாவரசி ......
- கவிதை பூக்கள் பாலா .


.........

Sunday, January 9, 2011

பார்த்து ரசிக்க....


வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு ,
பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு ,
நிலவு பார்த்து ரசிக்க ,
நீ என் வாழ்க்கை முழுக்க
என்னவளே !.........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, January 6, 2011

விண்னை தொடும் நம் காதல் .......



















உன்
விழிகளுக்கு,
எனை சுட்டெரிக்க பணித்த தேவதையே !
உன்னுடன் பிரிவில்லா உறவாடும்,
உன் உறவுகளிடம் வினவிப்பார் !

ன் கூந்தலில் குடி இருக்கும்
ரோஜாவை கேட்டு பார் ! ,
என் புன்னகையின் வலி புரியும்.

தோடுகளிடம் கேள்வி தொடுத்து பார் !,
உனை தொடரும் என்னிலையை,
தொடர்கதையாய் சொல்லும் .

ன் தோல் தழுவும் துப்பட்டாவை
முறுக்காமல் விட்டுப்பார் !,
தாவி எனை தழுவிக்கொள்ளும் .

ன் கால் தடங்களிடம்
உளவுச்செய்தி உளற சொல்லிப்பார் !,
உனை பல காலம் பின்தொடரும்
உளவாளி நான் என்று எச்சரிக்கும்.

ன் சுவாச காற்றிடமும்
கனிவாய் கதைத்து பார் !,
எனை கடக்கும் நேரம் அதன்
உடல்சுடும் உண்மையை உரைக்கும்.

நீ வடிக்கும் வியர்வையை
விரைவாக கேட்டு பார் !,
தீர்த்தமாய் என் தலை சுமைக்கும்
பக்தியை பறைசாற்றும் .

நீ கடக்கும் பாதையை
என் வாழ்க்கை வீதியாக்கிய காதல் ,
உன் இதயத்தில் சமாதி ஆகும் முன் ,
உன் காதலுக்கு விடுதலை கொடு ,
விரைவில்
விண்னை தொடும் நம் காதல் ............
கவிதை பூக்கள் பாலா

என் காதலுக்கு(கவிதைக்கு) வாழ்த்து சொல்லிட்டு போங்களேன் ....
என் கவிதைகள் தலை வணங்கி ஏற்கும்....

Tuesday, January 4, 2011

நமக்கு பேரு ''இந்திய குடிமகன்...














தே
ர்தல் வந்து,
நம்ம வீடு வீடா தேடுது ,
தெரியாத முகமெல்லாம்
நம்முன்னே நாணுது ....

னங்கொண்ட தலைகளெல்லாம்
இப்ப தலை கீழா நடக்குது ..........
ட்டி வச்சா ஆனவமெல்லாம் ,
அடிபட்டது போல் ஆகுது ....

டங்காம திரிஞ்சதெல்லாம், ஐயோ !
பாவமுன்னு சொல்ல வைக்குது....
டக்காத கால்களெல்லாம் ,
நடை பயணம் போகுது ........

டிப்பிலே உச்சம் தொட்டு ,
நாய் நரியெல்லாம் நாடகமும் நடத்துது .....
கொசுக்கூட செல்லாத இடமெல்லாம் ,
கொடிநடையா கால்கள் நடக்குது ......

தேன் சொட்டும் வார்த்தையாலே ,
நம்ம திகைக்கத்தான் வைக்குது ........
கைவனும் இப்ப உயிர் நண்பன்னு ,
தழுவி ஊரைத்தான் ஏய்க்குது....
தெல்லாம் அரசியல்ல சகஜமுனு ,
தத்துவமா வாய் கிழியுது ........

யிரை குடித்த ஊழலெல்லாம்,
உலகெல்லாம் நாருது.......
நாற்றத்தின் நடுவிலேயும் ,
பழிவாங்கல் இதுவென்று ,
நமட்டு சிரிப்பு சிரிக்குது .....

வீழ்ந்த மக்களை எல்லாம் ,
விலை கொடுத்து வாங்குது....
னம் பொறுக்கா கதரியோரை,
காவல் கொண்டு குடையுது ....

டமையை சாதனை என்று ,
தம்பட்டம் தான் அடிக்குது ,,,,
தை கூட செய்யாத சிலது ,
குறை சொல்லி திரியுது .......

குற்றங்கள் பல செய்தால் ,
குத்தகை வேட்பாளர் ஆகுது ,,,,,
டிச்சதுல சில்லறைய ,
செலவினமா காட்டுது ......

வேண்டியவன் இவனென்றும் ,
நம் இன, மதத்தோன் இவனென்றும்,
நம்மளும் ஓட்டு போடுது ........
போட்ட பின்னாடி, அடிமை என்றே
எண்ணி வாடுது ........

வாக்குறுதி எல்லாம் இப்ப ,
வக்கற்று போகுது .......
நாதியற்ற நாட்டுல ,
நமக்கு பேரு
''இந்திய குடிமகன் ;;......
---
பேச தெரிந்தும் ஊமையாய் பாலா

Sunday, January 2, 2011

இன்று மறைந்து போனது ..............
















இரவின்
மடியில் இன்பங்கள் தாலாட்ட ,
கனவுகள் இதமாய் கதைகள் சொல்லிட,
வலிகளை எல்லாம் கதவு தடுத்திட,
தாயின் மடி சுகம் மெத்தையுமாயிட ,
தென்றலை இதமாய் செயற்கை வழங்கிட,
தொலைத்த நினைவுகள் கண்முன்னே நிழலாடிட ,
இமைகள் பணிமுடிந்து கதவடைப்பு செய்திட,
எனை காக்க இதயம் இடைவிடாது உழைத்திட,
நாளை விடியும் என நம்பிக்கை பறைசாற்றிட,
உடல் மீது உயிர் காதல் மெய்யென வினவிட ,
உறக்கம் உடலை காமத்தில் மயக்கிட .......
இன்று மறைந்து போனது ..............
இரவு வணக்கங்களோடு ........
- பாலா .

Saturday, January 1, 2011

ரோஜா புன்னகை...
















ரோஜாவுக்கு
இந்த ராஜா மீது காதலா .....
இல்லை உன் கூந்தலோடு உறவாட ஆவலா .....
என்னை பார்த்தும் புன்னகைக்கிறது ... ..

நான் உன் உறவு













நீ சுவாசிக்கும் காற்றுக்கு தெரியும் போல
நான் உன் உறவு ( காதலன் )என்று.................
தென்றலாக என்னையும் தழுவி செல்கிறது .....