என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label தத்துவ கவிதைகள். Show all posts
Showing posts with label தத்துவ கவிதைகள். Show all posts

Saturday, January 3, 2015

இயற்கை :-


பிறவி தாய்க் கொடுத்ததடா !,
வாழ வைப்பது நாங்களடா !,
இதை புரிந்துக்கொள் மானிடா !,
இல்லை சிதைந்து நீபோவாயடா !


- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 10, 2012

இது காதலின் தோல்வி அல்ல


ண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால்  காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த  சுயநலத்தோடு  ஒரேஇடமே!

சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும்  புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .

வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு  மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
 விலக்கி  வைக்கும் காதலே !

ரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !

காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும்  சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !

து காதலின்  தோல்வி அல்ல ,
இருவர்  உறவின்  தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.

- கவிதை பூக்கள் பாலா

Friday, November 26, 2010

மண்டியிட்டு காதலை பெறாதீர்கள்




















மண்டியிட்டு
காதலை பெறாதீர்கள்
மனம் கவர்ந்து காதலை பெறுங்கள்
மாற்றங்கள் உடையில் (வெளி தோற்றம் ) மாறலாம்
கொண்ட காதலில் மாறாதீர்கள்
உண்மைகள் காதலில் காலம் தாழ்த்தலாம்
ஆனால் காதலின் ஆயுள் முடிவற்றது
காதலில் காமங்கள் இடையிடையே வந்து போகலாம்
காமமே காதலை உயிர்பிக்காது .
(தத்துவம்மாதிரி இருக்குல்ல) - பாலா

இந்த போடோவுக்காக எழதியது