என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label நொந்த கவிதைகள். Show all posts
Showing posts with label நொந்த கவிதைகள். Show all posts

Friday, December 25, 2015

ஓ மை காட்

வீரத்தின் வடிவமே ! ,
அசகாயசூரனே !,
வீச்சருவாள் வீரனே !
துப்பாக்கியின் தோட்டவே !
கருணையின் மறுவுருவே !
அன்பின் பிறப்பிடமே !
எல்லாம் பேனருக்கு மட்டும்தானே !

உள்ளுக்குள்ள கதறல்,
சுற்றியும் எப்பவும் பதறல்,
எதுக்குடா இந்த வாழ்க்கை....
இரத்தத்தை ரசிப்பவனுக்கு
கருணை எங்குட்டிருக்குடா...
ஒரே காமெடியா இருக்குப்பா
பேனர்களை பார்க்கும் போது...
உடனே நம்ம சுனா பானா
நினைவுக்கு வரத நிறுத்தமுடியலிங்கோ..
ஓ மை காட்

இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா...

சொல்லாத துயரங்களில் சென்னை அழுவுதடா,
சூடான சென்னை என்ற பெயரும் மாறுதடா,
குடித் தண்ணீருக்கே அன்று குழாயடி சண்டையடா,
தண்ணீர் பிடிப்பதற்கே இன்று பாத்திரம் இல்லையடா,
நீரில் மிதந்தாலும் குடிக்க நல்ல தண்ணியில்லையடா,
குடிமக்கள் குதுகலிக்க சரக்கு தட்டுபாடில்லையடா
சூழும் தண்ணீரிலும் சுருட்டும் ஜென்மங்களடா,
சுற்றிக்கொஞ்சம் பாரடா நம்மக்கள் பாவமடா,
முடிந்த உதவிகள் செயலில் இறங்கி செய்திடுடா,
இடைஞ்சல் செய்யாமல், இயற்கையை வையாமல்,
இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா....


- கவிதை பூக்கள் பாலா
Like

Tuesday, December 21, 2010

கண்ணுபட்டு போச்சி



குழந்தை அழகென்றேன் ..
கண்ணுபட்டு போச்சி .....
பாட்டியின் குரல் ...
என் செவி தொட்டபோது
முள்ளாய் தைத்தது
இதய சுவற்றில் ......