என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label நிலவு கவிதைகள். Show all posts
Showing posts with label நிலவு கவிதைகள். Show all posts

Friday, December 25, 2015

மழைகுளியல்:


தொடுவானம் தொட்டிலாக்கி,
அன்னைபூமியின் விரல்பிடித்து
சுற்றிவரும் நிலவுமகள்..
கிலுகிலுப்பை இடிகலாக்கி,
புன்னகைத்து மின்னலாக்கி,
வருணனை நீர்ச்சாரலாக்கி( ஷவர்)
மண்வாசனை களிம்பு பூசி
குளித்தெழுகிறாளோ வெண்மதியாள்..

- கவிதை பூக்கள் பாலா
Like

ஓடி ஒளிந்தான் சூரியன்

புன்னகைத்த நிலவுபெண்,
சூரியனின் காம பார்வையில்
நிலைக்குலைந்து அழுது வடிக்கிறாள் ,
ஆறுதல் சொல்ல யாருமில்லாமல்,
பயத்தில் ஓடி ஒளிந்தான் சூரியன்..

Wednesday, November 5, 2014

நிலவுக்குள் நீந்த முயன்றேன் :

நிலவுக்குள் நீந்த முயன்றேன்
பாட்டியின் அனுமதி எங்கே !
கடவுச்சீட்டு பரிசோதனை -
எனக்கு சோதனை.

கட்டணம் யாதென்றால்
இரண்டு வடை வாங்கினால்
இங்கிருந்தே போகலாமாம் ..

வழி தெரியாமல்
நான் முழிக்க
நரியாரின் துணையுந்டென்றனர்

குதுகுலத்தில்
மனம் குத்தாட்டம் போட
இடியாக இயம்பினர்
 நரியாரின் அடிப்பொடிகள்.

கடவுச்சீட்டிற்கு இரண்டு வடை
அவருக்கு நாலுவடையாம் ....
விக்கித்து வினவிய போது
வில்லனாக காக்கை வந்தது.

என்னடா இந்த சுப்பனுக்கு
வந்த வேதணை என்னுபோதே
பவ்வியமாய்
பல்லித்தார் காக்கையார்

காதும் காதும் வையுங்கள்
கால்மீது கால்போட்டு
கண்னுரங்கள் கனநேரத்தில்
கடவுச்  சீட்டு ........
ஆனால் வடை விருந்து
இடவேண்டுமாம் ....

மொத்தம் எத்தனை
வடைகளடா
வாங்குவேநென்றேன்
இதுதான் கடைசி வடை
வாங்கினால் இதேடு
இல்லை விட்டோடு
என்றனர் எக்கலதோடு .

 நிலவுக்கனவை
கழட்டி போடா
கடுகளவும் மனமில்லை .....
- கனவு தொடரும்
- கவிதை பூக்கள் பாலா  


Sunday, January 9, 2011

பார்த்து ரசிக்க....


வானில் பார்த்து ரசிக்க நிலவுண்டு ,
பூமியில் ரசிக்க நீ மட்டுமே எனக்குண்டு ,
நிலவு பார்த்து ரசிக்க ,
நீ என் வாழ்க்கை முழுக்க
என்னவளே !.........
- கவிதை பூக்கள் பாலா