விதவை என்ற சொல்லெடுத்து வீதியில் வீசி போகிக் கொண்டாடுங்கள்... துணையற்றவர் என்றே இருபாலருக்கும் பொதுவாய் அழைத்திடுங்கள்... புதுவாழ்க்கை தொடங்கியே இழந்த வாழ்வை மீட்டெடுங்கள்... சிறிய வாழ்வும் சிறப்படையும்....
உள்ளுக்குள்ள கதறல், சுற்றியும் எப்பவும் பதறல், எதுக்குடா இந்த வாழ்க்கை....
இரத்தத்தை ரசிப்பவனுக்கு கருணை எங்குட்டிருக்குடா...
ஒரே காமெடியா இருக்குப்பா பேனர்களை பார்க்கும் போது...
உடனே நம்ம சுனா பானா நினைவுக்கு வரத நிறுத்தமுடியலிங்கோ.. ஓ மை காட்
எப்படியோ எப்பொழுதோ இழந்திட்ட உணர்வுகள் தனக்குள்ளே புதைத்தே தான் கடக்கின்றோம் விளைவாய் விபரீதமாய் மன உலைச்சல்கள், வடிந்திடும் கனவுகள், உலவிடும் நினைவுகள், அசைத்துப்போடும் உணர்வுகள் தான் மனிதன், பயணிக்கு வாழ்க்கையில் சிலபிடிப்புகள் சில்லிடும், சிறகடிக்கும் மனது மீண்டும் பிறக்கும் மனிதனாய், மனம் மலர்ந்திடும் மகிழ்வாய் மாற்றிடும் கடமைகளை, தொலைந்த மகிழ்வு தொடங்கிடும் கடமையோடு.. வாழ்க்கை மகிழ்வுக்கு பல பயணங்களாய் தொடரும், மனிதன் பயணம் ஒரு சுழச்சியே...
மழையை வரவேற்று மக்களுக்கு சேர்த்து வைக்காமல் உப்புகரிக்க கடலில் சேர்த்திடும் அரசின்(மக்களும்தான்) செயலற்ற நிலைக்கு தூ தூ என்று காரி துப்பிக்கொண்டிருக்கிறதோ மழை...
கொட்டும் மழை கொடைஎன்பதா? இல்லை கொடுமை என்பதா ? வருணா நீ இன்னும் அழுவது சரியா ? அவள் இல்லை வரமாட்டாள் அழாதே எங்களையும் அழவைக்காதே ! அமைதிக்கொள் அடுத்த காதல் மலரும் மட்டும்...
இயற்கை, தனக்குண்டான ஆபத்தை தானாக சரிசெய்துக்கொண்டிருகின்றது, மக்கள் செய்த இயற்கை வன்கொடுமைகளை அசுத்தங்கங்களை அகற்றி, தன் இருப்பிடங்களை தேடி, கொள்ளைக்கொண்டவர்களுக்கு அறிவுப்புகட்டி, தன்னை அழியாமல் பார்த்துக்கொள்கிறது மக்களை நம்பாமல் இயற்கை...
சொல்லாத துயரங்களில் சென்னை அழுவுதடா, சூடான சென்னை என்ற பெயரும் மாறுதடா, குடித் தண்ணீருக்கே அன்று குழாயடி சண்டையடா, தண்ணீர் பிடிப்பதற்கே இன்று பாத்திரம் இல்லையடா, நீரில் மிதந்தாலும் குடிக்க நல்ல தண்ணியில்லையடா, குடிமக்கள் குதுகலிக்க சரக்கு தட்டுபாடில்லையடா சூழும் தண்ணீரிலும் சுருட்டும் ஜென்மங்களடா, சுற்றிக்கொஞ்சம் பாரடா நம்மக்கள் பாவமடா, முடிந்த உதவிகள் செயலில் இறங்கி செய்திடுடா, இடைஞ்சல் செய்யாமல், இயற்கையை வையாமல், இனியேதும் நடக்காமல் நினைவில் கருத்தாய் வையடா....
மீண்டும் உங்களுடன் இணைகிறேன்.... மழையின் பிடியில் சென்னை... எனக்காய், எங்களுக்காய் ... வாடிய , வேண்டிய அன்பு நெஞ்சங்களே ! நெகிழ்ந்தே போனோம் உங்கள் அன்பிலே... மனிதம் இறந்ததாய் நானே பலமுறை எழுத்தி இருக்கிறேன் ஆனால் அது நம் மண்ணின் மகிமை ... உங்களுக்கெல்லாம் நன்றி சொல்லி தனிமை பட விரும்பவில்லை.. சந்தோசம் உங்கள் அன்பிலே விரைவில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மீண்டுவிடும்...
- உங்கள் கவிதை பூக்கள் பாலா
தொடுவானமும் பயப்படுகிறது தன்னை தொட்டுவிடுமோ ! இந்த மழை வெள்ளம் என்றே....
மின்னாத ஏழ்மையின் வாழ்க்கை இன்றும், மெழுகுவர்த்தி துணையோடு மெழுகாய் கரைகின்றதே...
கரம்கொடுக்கும் கரங்களுக்கு கறைப்படுத்தி நீ முகம் காட்டுகிறாய், போலியான உன்வேஷம் மழை வெளுத்துகாட்டியதே....
நீலிக்கண்ணீரும் காட்சிகளும், பொய்ஆடையின்றி நிர்வாணமாய் அரங்கேற்றியதும் மழைவெள்ளமே...
குதறிப்போட்ட எங்கள் வாழ்க்கையை கூறுபோடும் ஈனபிறவிகளே, ஈமசடங்கிலும் ஈக்களாய் மொய்க்கின்றாயே இனிப்பைதேடி...
விடியுமோ வாழ்க்கை என்றே ஏக்கத்திலேயே ஏமாற்றமாய் , எரிமலையாய் எரிகிறதே வயிறும், நினைவுகளும்....
- கவிதை பூக்கள் பாலா
வீருநடைபோடு விடியலை நோக்கி, விடிந்திடும் என்றே நம்பிக்கைக் கொள்ளு, நாட்டின் நிலையறிந்து வீதியில் இறங்கு, உன்நலம் காக்கவே கருத்தினில் கொள்ளு, கொள்ளையே கொள்கையாய் அடிமைகளின் நிலையில் கொடுமைகளை கண்டே களத்தினில் நில்லு, ஒற்றுமை இங்கே முழுமையாய் கூடு, கொட்டமடிக்கும் கூடாரங்களை ஒழித்திட எண்ணு மாற்றதின் நிலைகளை கூவியே சொல்லு, நடிப்பில் திளைத்து நாட்டை பிளக்கும் நயவஞ்சக அரசியலை நடுவீதியில் கொல்லு, நாட்டின் நலமே நமதென மனம்பொங்கு, மாற்றத்தில் கரம்கொடுத்து காவியம் படைப்போம்... வென்று தமிழகம் காத்திட்டேன் என்ன சொல்லு, நெஞ்சை நிமிர்த்து போராட்டம் தொடங்கு...
- கவிதை பூக்கள் பாலா
இதமான மனநிலை இல்லாதபோதும், இருப்பதாய் நினைக்கும் மனமிருந்தால், வாழ்க்கை சுமூகமாய் கடந்துவிடும்...
கனமான இதயம் கவிதை படிக்குது, காரணம் அறியாது பரித்தவிக்குது, காணாமல் எதையோ எதிர்பாக்குது, விலகிடும் அன்பு உருகுலைக்குது, அளவெடுத்த வார்த்தையில் அறுத்தெறிக்குது, ஆடிய மனமிங்கு அழுது வடியுது, மதியாத அன்பு இப்போ மதிப்பாகுது, இழந்தபின்பே ஞானம் பிறக்குது....
நிலவு காணாமல் ஏங்கும் மனதுடன் நீண்ட இரவொன்று.. நினைவில் நீண்ட கனவொன்று விடியும் வரை தொடர்கிறது.. விட்டுவிட்டு அவள் நினைவு தூவானமாய் விடுவதாய் இல்லை.. விழிகளில் வினவிய காதல்கணைகள் கபரிதம் செய்கிறது சுயநினைவுகளை.. சுட்டும் சுடாத வெப்ப சலனம் வியவையாய் தேகத்தில் சிலிர்கிறது.. உயிருடன் உறவாடும் நேரங்களில் வார்த்தைகள் மௌனமாகின்றது .. உணர்வின் உந்துதல் காதல் நம்பிக்கையின் நரம்பியல் செயல்பாடு.. கனவொன்றும் பொய்க்கவில்லை விடியலுக்கு முன்அவள் கைபேசியில் முத்தங்கள் அவள் நினைவுகளோடு உறங்கிபோனேன்....
நாம்மென்று சொல்வதில் நளினம் இருக்கிறது, நம்மில் நம்பிக்கை பிறக்கிறது, நெஞ்சோடு முகம் புதைத்து, கரங்களால் தேச் சிறையிட்டே காதலில் நாணுகிறது தன்னை மறந்தே.....