என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label காதல் அனுபவம். Show all posts
Showing posts with label காதல் அனுபவம். Show all posts

Friday, December 25, 2015

இதமாகுமடி....

குடைக்குள் இழுத்தாய்,
கருணையா காதலா ?..
மழைத்தூரல் அழகடி,
நனைந்திடவும் ஆசையடி,
உணர்வுகளை மறைத்தே
பொய்யுரைத்தேன் நானடி..
மூச்சுக்காற்றும் தனலானதடி ,
தொண்டைகுழியும் விக்குதடி,
இடைத்தீண்டல் இம்சையடி,
முத்தமிடதுடிக்குதடி,
வார்த்தைகள் ஒலியிழந்ததடி,
சிறுதீண்டலும் சிதைமூட்டுதடி,
உச்சந்தலை வெடிக்குதடி,
உன்மழை ஓவியம் கிறக்குதடி,
காமம் கட்டுக்குள்இல்லையடி,
விழிமோதும் நொடிப்பொழுதில்
மின்னலும் தோற்க்குமடி...
ஏன் இந்த கொடுமையடி,
தவிர்க்கவிரும்பா தவிப்படி...
விரல்தீண்டலில் முகம்பார்கிறாய்,
சிறுபுன்னகையில் புரிவேனடி,
மழைசாரல் இதமாகுமடி....

- கவிதை பூக்கள் பாலா

Sunday, January 11, 2015

வார்த்தைகளும் இனிக்குதடி

இதயக்கூட்டில் ஓருணர்வு,
உருளாத உருண்டையாய்
சிக்கித்தான் தவிக்குதடி....
ஏன் என்ற கேள்விக்கணை
எட்டி எட்டி உதைக்குதடி...


உளறாமல் சொல்லெடுக்க
முடியுமா என்னவளே !
உன் வார்த்தை செவிமடுக்க
இடைவிடாது செவி தவித்ததடி....



காகிதங்கள் கதைத்த காலம்
கடந்தேதான் போனதடி..
கண்ஜாடை காட்டுவதையும்
கண்ணெதிரே காட்டிடும் யுகமடி...


ன்நினைவை திரையிட்டு
நிமிடங்கள் கடந்ததடி...
காட்சியெல்லாம் நிழலாக
நிசம் காண துடிக்குதடி...


லியற்ற கனவுகளும்
உன்குரல் கேட்கத் தூண்டுதடி
ஓயாத உன்நடையும் இப்போ
ஓய்வெடுக்க வைத்ததடி..


புரிந்து தான் தெளிகிறது
புலம்பிய இதயம் இப்போ...
வந்துவிட்டேன் உன்னிடத்தில்
இதழ் சொட்டிய தேனாக
வார்த்தைகளும் இனிக்குதடி

- கவிதை பூக்கள் பாலா

Wednesday, November 26, 2014

இனி ஏது பிரிதலிங்கே.....:


காதலிக்கும், காதலனுக்கும் 
வார்த்தை போர் ,
யார் காதல் பெரிதென்று.


உனை அரை நிமிடமும் அகலேன்
உன் நினைவையும்விட்டு விலகேன்
புரியாதவன -காதலி,
உன் சந்தோஷம் பெரிதென விரும்பி
உனை சுற்றும் பக்தன்
நான் காதலன.


வார்த்தைகள் கனல் கொண்டு
காதல் பேர் ஆயுதமின்றி,
பார்த்துக்கொண்டிருந்த
வன ஈக்கள் பரிதாப்பட்டு
நாட்டமை செய்ய
முடிவெடுத்து.பிரதிட்டு
கூட்டியது விசாரணை சபை...


காதல் யாதென்று புரியா
நீங்கள் எப்படி காதலர்
முதற்கேள்வியே
மூச்சு திணறல்,
வாதங்கள் விதவிதமாய்
 அவர்கள் ஒருவர்மேல்
வைத்த காதல் உச்சம்
வைத்து வாதிட்டனர்,
வனம்முழுக்க ஆர்வம்
தொற்றியது நாட்டமை
தீர்ப்பு யாதாகும்
தனிவிவாதம் நடந்தேறியது.


தீர்ப்பு சொல்ல ஈக்கள்
நாட்டாமை(ராஜா) தொண்டை
கனைத்து ரீங்காரம்மிட்டார.


யாது தவறென்று புரியா
காதல் அன்பர்களே!,
உங்கள் காதல் பொய்யல்ல
விதமே பரிதாபம், ஏக்கத்தோடு
இளம் ஜோடிகள்........


காதல் யாதெனறிவாய் முதட்
காதல் எப்படி தனிமைப் பட்டது,
என்காதல்.. என் காதல்..  
சிவந்துமுகத்தோடு
கருணை விழியோடு தொடர்ந்தார்.


அன்பு பரிமாறிய பிறகே
 காதல் என அறிவீர்களா?
ஒன்றான இதயம் ,உணர்வு,
 ஏன் தனிமைப் பட்டது.
நம் காதல் என்ன ஏன்?
 அறியாய் ..........


நிசப்தம் நிலைத்து நின்றது,
தொடர்ந்து தீர்பெழுதிய
வார்த்தை தொடர்ச்சி..
நான் விடுத்தது நம் காதல்
 நாம் என்செய்வோம்
விவாதம் புரிதல் அன்பொழுக
அரவணைத்து நம் காதலாய்
பாருங்கள் உணருங்கள்.


நம் காதல்உயிர்த்தேவை
யாதென சினுகுங்கள்,
காதல் அறையில்
வஞ்சிக்கா சிறைப்பட்டு
வளமோடு வாழ்வீர்
காதல் ஈரிதயம்
ஓர் உணர்வு கொண்டது.
வார்த்தை முடித்து
கம்பீரம் மிடுக்கோடு
காதல் சுவையறிந்த
நல்லோனாய்
தேணீ நாட்டமை......


பலத்த கரவோசை
காதலோடு கவிபடித்து
இணைத்த உள்ளம்
கனிந்த காதல்
இனி ஏது பிரிதலிங்கே........

- கவிதை பூக்கள் பாலா

Saturday, November 1, 2014

நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்

விடாத  மழையிலும்,
 என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
 வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின்  அன்பில் 
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம் 
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா

Monday, March 4, 2013

இதழோடு தஞ்சமானேனடி

என் விழிகள் பேசிடும் வார்த்தைகளுக்கு
உன் சிறுபுன்னகை சொல்லிடும் பதிலுரையில்
என் உதடுகள் செய்யும் சேட்டைகளினால் 
உன் கன்னத்தில் பாயும் ரத்த நாணல்களால்
மயங்கி உன் இதழோடு  தஞ்சமானேனடி ........

- கவிதை பூக்கள் பாலா


Sunday, January 23, 2011

என்னை கழட்டித்தான் விட்டு புட்டான் ( லேட்டஸ்ட் காதல் )















குட்டி சுவற்றில் நின்னுகிட்டு ,
சைட்டு தான் போட்ட மச்சான்.
குரங்கு குட்டி கரணம் போட்டு ,
பேருந்து சாகசம் செஞ்ச மச்சான்
தினந் தினம் காதல் பல வேடம் போட்டே தான்,
நண்பகிட்ட பிச்சை எடுத்து,
பைகொல்லம் ஓட்டி வந்தான்.
மொபைல்ல பல விதமா,
மொக்கையெல்லாம் போட்ட மச்சான்,
முட்டி மோதி காதலுன்னு,
கண்ணடிக்க வச்சிப்புட்டான்.
ஊர் ஊரா சுத்தி வந்து,
கடைசில என்ன கவுத்துப் புட்டான் .
பின்னே நண்பன்தான்னு என்ன யேச்சிப் புட்டான் .
இப்ப என் தோழி சூப்பருன்னு,
என்னை கழட்டித்தான் விட்டுப் புட்டான்.
அவன் நண்பனை எனக்கு அறிமுகம் செய்யாமலே !
- கவிதை பூக்கள் பாலா
குறிப்பு : அடிக்க வரவங்க ஒட்டு போட்டுட்டு வாங்க தெளிய வச்சி அடிக்கலாம்
..

Friday, November 5, 2010

மறந்து போனது என் வாழ்க்கை


















நீ கண் அசைத்தாய் என் கனவுகள் மாறிப்போனது
நீ நெருங்கினாய் என் சுயசிந்தனை அற்று போனது
நீ காதலன் என்றாய் என் கனநேரங்கள் நீண்டு போனது
நீ என் உறவு என்றாய் என் உறவுகள் உதரி போனது
நீ வாழ்க்கை என்றாய் அது நீ தான் என்றேன்
நீ உலகம் பெரியது என்றாய் ,
யுகமே உன்னால் சிறியது என்றேன்
நீ மறந்து விடு என்றாய் ,மறந்து போனது என் வாழ்க்கை .
- பாலா