என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts
Showing posts with label வாழ்க்கை கவிதைகள். Show all posts

Friday, December 25, 2015

விரட்டி வரும் துன்பம் ,
பிடித்துவிடாது ஓடும் இன்பம்,
வாழ்க்கை வட்டத்தில்,
கோகோ விளையாடு..

Thursday, January 29, 2015

இன்று உலகை ஆளுது...


நோயும் நொடியும் இல்லமா
வாழனுன்னு ஆசைதான்..
கொசுக்களும், கெமிக்கலும்
கெட்ட சுற்றுசூழலும் பிணிய(நோய்)
வாவான்னு கூப்பிடுது...

உடலுல பாதுகாப்பற்று
எதிர்க்க இல்லாது தவிக்குது..
அழையா விருந்தாளியா
ஆளைக்கொல்லுது
முடங்கிபோகத்தான் வைக்குது....
மருத்துவம் வளருது..
அதைவிட நோய்கள் பலமா ஆகுது,
பணமும் விரையம் ஆகுது,
மனிதனை வென்று
இன்று உலகை ஆளுது...
- கவிதை பூக்கள் பாலா

Tuesday, January 11, 2011

இதுதானே நியதி !
















உதடுகள் சண்டையிட்டு வார்த்தை பிறந்தது,
கண்கள் பேசிக்கொண்டு காதல் மலர்ந்தது,
கைகள் இணைந்து நட்பு என்றது ,
உடல்கள் பிணைந்து (காம) பசி தீர்த்தது,
உயிர்கள் உறவாடி உறவை வளர்ந்தது,
குரலோசைகள் ஒன்றாகி உயர்வு கிட்டியது,
இன்பம் துன்பம் முட்டிவாழ்க்கை என்றது .
ஜெயித்தது உடன் ஒட்டி கொண்டது, .
இன்பம் இதுவல்லவோ வாழ்க்கை என்றது ,
துன்பம் போதுமட என்று சொல்லவைத்தது,
வாழ்க்கை, இதுதானே நியதி என்றது .....
- கவிதை பூக்கள் பாலா


...