என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label பிறந்தநாள் கவிதைகள். Show all posts
Showing posts with label பிறந்தநாள் கவிதைகள். Show all posts

Saturday, December 11, 2010

சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் பிறந்த நாள்

வில்லனென்று நீ மலர்ந்தாய் ,
வீறுகொண்டு உருமாறினாய் ,
உலகம் உன்னை நாயகன் என்றது,
நன்றி என்று நீ வினவினாய் ,
நாடே உன்னை உச்சத்தில் வைத்திருகின்றது ,
நடிப்பில் சூரன் இல்லை என்று சொன்னவர்,
வாய்பிளக்க வைத்தவன் நீ ,
வணக்கத்தோடு நீ நடக்கும் பாதை
முள்ளில்ல எங்க இதய நீரோடை ,
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களும்
உண்டு உன் வாழ்வில் ,
ஏமாற்றாமல் நீ இருந்ததால் -நாங்கள்
உன்னை வைத்தோம் உச்சத்தில்,
உருண்டவன்னெல்லாம்
உலகை ஆள நினைக்கும் போது,
நீ மட்டும் உண்மையாய் இருந்தாய் ,
ஊருக்கு பகட்டாய்
சிம்மாசனத்தில் அமராமல்,
கடவுளுக்கு கைகாட்டி சென்றாய் .
அவனுக்கு தெரியும் உன் மனது
அதனாலேயே இன்றும் நீ அணியவில்லை
அரசியல் வேடம் ..............
பல நூறு படங்கள் நீ நடித்தாலும்
உனக்கு வயது மட்டும் இன்னும்
பின்னோக்கி செல்வதன் மாயம் என்ன ?
அதனாலேயே சொல்கிறேன்
மீண்டும் மீண்டும் குழந்தையாய்
எண்கள் இதயத்தில் பிறப்பாய் .
வாழ்க பல நூறாண்டு என வாழ்த்த
எங்களுக்கு வயதுண்டு -காரணம் ,
என்றும் நீ குழந்தையாய் எங்கள் மனதில்.............
- பாலா