என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Friday, December 25, 2015

விருப்பம் இணையும் போது

காமத்தை மறந்தவரும் இல்லை,
காதலை மறுத்தவரும் இல்லை...
விரும்பும் விருப்பம் இணையும் போது...

என்னவளே !

இலைகளின் நடுவே பூத்திடும் மலரை போல்
உந்தன் இருப்பிடம் எளிதில்
விழிகள் கண்டிடும் மாயமென்ன ?
உந்தன் புன்னகைதானே !
என்னவளே !

Saturday, January 3, 2015

என்னுள் துளிர்க்க வா :-



விழிகளின் ஓரம் ஈரம்,
உன் நினைவுகள் தரும் பாரம்,
கனவுகளைத் தொடும் மாற்றம்,
தரும் வலிகளில் இதய போராட்டம்.....



நினைவுகள் கெக்கிலிட்டவித்துக்களாய்
பிழிந்து விழிகளில் கசியுதடி....
மழைத்துளி மண்தொட்ட மாற்றமாய்
மனம் கலங்கித்தான் போகுதடி......

ன் ஒளித்தந்த நிலைக்கண்ணாடி
பிம்ப நிழலுமற்றுப்போனதடி....
உன் உருவான தலையணையும்
எனை தவிக்கத்தான் வைக்குதடி...

ன்னுள் அன்பின் நீரூற்றாய்
இதயம் நிறைக்க வா...
வீழ்ந்திட்ட உணர்வு விதையை
விருச்சமாக என்னுள் துளிர்க்க வா....
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, December 31, 2014

என்னுள் பூத்தாயடி..:-


உருகாப் பனித்துகளின் மீதே
உருகித்தான் விளையாடிமகிழ்வோமடி
பிடிபடா வானவில்லினில் உன்
விழியம்பைத் தொடுத்துவிட்டாயடி
என்னிதயம் மயக்கிக் கொய்யும்
உன் யுத்த அழகினை கண்டேனடி....
அள்ளித்தழுவிய கனத்பொழுதினில்
எந்நிலையில் மாற்றம் உணர்ந்தேனடி,
என்னுயிர் நீயென வினவிய நொடிகள்,
ஒருகோடி மின்னல்கள்
பூக்களாய் என்னுள் பூத்தாயடி .....

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, November 11, 2014

காதல் உயிரென இன்னும் தொடர்வது ...........

சந்தோஷ நிமிடம் நாம்
பேசிய முதல் வார்த்தை
கடின காலம் கண்டித்து
நீ நடத்திய மெளனயுத்தம்
நிறைவு நேரம் உன்துயர்
துடைத்து நீ என் நெஞ்சில்
புதைந்த அரவணைப்பு
இறுகிய நிமிடம்
துக்கம் தாளாது நீ சிந்திய கனம்
கரம் இருந்தும் துடைக்க துப்பில்லா
நான் துடித்தது
சினம்நிறைத்தது
சிந்தனை இருந்தும் தெரிந்தும்
வீம்பாய் சிறையில் சிக்கியது
பொறுமை புரையோடியது
கண்டும் காணாது
நீ நடத்திய நாடகம்
உண்மை என நம்பியது
வலிகள் நிறைத்தது
உன் நினைவில் நான்
இல்லாமல் போனது
உணர்ச்சி நிறைத்தது
நீ கொண்ட
காதல் உயிரென
இன்னும் தொடர்வது ...........
- கவிதை பூக்கள் பாலா

 

Monday, November 3, 2014

காமலோகத்தின் வாசல் திறந்ததடி ........

உனது அங்கங்கள் கீரிய நொடிப்பொழுது
மின்சாரம் பாய்ந்து என் தேக முழுதும் ......
இச்சைகளின் மொத்த தொடுபுள்ளியாய்
காமலோகத்தின்  வாசல் தெரிந்ததடி  ........
- கவிதை பூக்கள் பாலா


Friday, October 24, 2014

அலைகளாய் போனது !

அலைகளை ரசிக்கவே வந்தேன் - ஆனால்
அலைகளாய் போனது என் உள்ளுணர்வு

- கவிதை பூக்கள் பாலா

வெறுமையை தந்ததேன் !

வெளிச்சமாக வந்த உறவு - இன்று
வெறுமையை தந்ததேன் !
உரிமையாய் இருந்த உன் உறவு
உணர்வற்று போனதேனே !

- கவிதை பூக்கள் பாலா

Saturday, June 22, 2013

உன்னை கண்ட பின்னே !

வரம் வேண்டி தவம்மிருந்தேன் ,
அன்பு , காதல், மோகம் , காமம் எதுவேண்டும்
கடவுள் வினா எழுப்பினார் வரம் கொடுக்க ,
அன்பான காதலோட மோகம் கொண்ட
காமம் வேண்டும் என்றேன் பெண்ணே !
உன்னை கண்ட பின்னே !
கடவுள் யோசித்து விட்டு ,
கொடுத்தேன் வரம் என்று,
மொத்தமாய் உன்னை எனக்கு
 சுட்டி கொடுத்தான் என்னவளே !
- கவிதை பூக்கள் பாலா

Thursday, April 11, 2013

 என்கண்களும் அழகானது !!

 ஆள்காட்டிய விரலாய் உருமாறி  என்கண்கள் !,
என்னவளை எனக்கு சுட்டிகாட்டிய  நொடிபொழுது முதல்,
என்கண்களும் அழகானது  .........

- கவிதை பூக்கள் பாலா 

Wednesday, March 21, 2012

நீ என் காதலி












 விழிகள் தேடிய காதல்
உணர்வில் வீழ்ந்ததடி உன்னில்,
உறவுகளின் மொத்தமாய் நீயடி ,
இன்று அதனினில் எனக்கு  நீ யாரடி !
தெரிந்தால் சொல்லிடு விரைவினில் ,
இல்லை, என் மனம் பிதற்றும்
 நீ என் காதலி என்று ............

- கவிதை பூக்கள் பாலா
 

Tuesday, February 14, 2012

காதல் இனிமையானது




உலக காதலர்கள் அனைவருக்கும் காதலர்
தின வாழ்த்துக்கள்...



















காதல்
......
உலகம் முழக்க ஒற்றை சொல்
ஒலிக்கும் விதங்கள் வேறாகலாம்,
ஆனால் உணர்வுகள் ஒன்றன்றோ .

விழிகளின் வழியோ !
செவிகளின் வழியோ !
எழுத்தின் வழியோ !
நினைவுகள் வழியோ !
கேட்காமல் வருவது
காதல் ....

றவு என்றோ !
நட்பென்ரோ !
உணர்வென்றோ
உயிர் என்றோ !
வழிதேடி
உள்புகும் காதல் .....

பிடிப்பதை மட்டும் யோசிக்கும்
கண்டதை எல்லாம் யாசிக்கும்
சுயம் மறந்து வாழ்விக்கும்
வாழ்வின் நாட்களை கொன்ழழிக்கும்
உள்ளம் ஏதும் புரியா பூரிக்கும்
வாழ்வின் உச்சம் தொட்டதாக
எண்ணி கொண்டாடும்
வலிகள் இல்ல காதல் இருக்கும் வரை ......

காதல் இனிமையானது .....

- கவிதை பூக்கள் பாலா



Wednesday, February 8, 2012

நீ வந்ததால் ........















உனை கண்ட நாள் முதலாய் 
கனவுகள் வருவதில்லை,
நிஜத்தில்  என் முன்னே 
நீ வந்ததால் ...........

- கவிதை  பூக்கள்  பாலா 

Tuesday, January 10, 2012

இது காதலின் தோல்வி அல்ல


ண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால்  காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த  சுயநலத்தோடு  ஒரேஇடமே!

சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும்  புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .

வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு  மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
 விலக்கி  வைக்கும் காதலே !

ரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !

காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும்  சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !

து காதலின்  தோல்வி அல்ல ,
இருவர்  உறவின்  தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, December 27, 2011

இன்றைய காதல்


உண்மை காதல் உலகினில் இல்லை ,
அப்படி இருந்தால் அதற்கு ஆயுளும் இல்லை .
வேஷம் மட்டுமே இன்று காதலின் வெற்றி ,
அப்படி நினைத்தே பல காதல் தோல்வி,
அழகே அமுதே இன்று காதலின் வசனம்,
காலங்கள் கழிக்கவே வெறும் கடலையை போடும்
காதலின் உச்சம் காமம் என்பதெல்லாம், இப்ப
காமத்தின் சொச்சம் காதல் என்றானது .
இதனிலில் இடையில் காதல் ஊசலாடி
உறவுகள் அறுந்து உருக்குலைந்து போனது .
- கவிதை பூக்கள் பாலா

Saturday, September 24, 2011

காதல் அழிவதில்லை

காதல் அழிவதில்லை ,
ஆம் காதல்  அழிக்க படுகின்றது ,
காதலி சலிச்சி போனா,
காதலன் கல்லாகி போனா !
பெத்தவங்க கண்கலங்கி  போனா !
உயிரை விடுவேன் மிரட்டும் போதும் !
உண்மை காதல் மறையும்  போதும் !
காதல் அழிக்க படுகின்றது ........
- கவிதை  பூக்கள்  பாலா  

Wednesday, April 20, 2011

காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது









பூத்த புது மலராய் புன்னகைக்கும் என்னவளே !
புதிதாய் உன்னுள் வந்த மாற்றம் ஏனோ !
என்னை பற்றி அறிய நீ முடுக்கி விட்ட
உன் ஒற்றர்களின்(தோழிகளின்) சேதி வந்துவிட்டதோ !
நமக்கும் ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்ற ஆனந்தமோ !
காதலுக்குள் கால் பதித்த புதுமையான சுகமோ !
ஒற்றையாய் சுற்றி திரிந்த மனதிற்கு
ஜோடி கிடைத்த இன்பமோ !
காதல் சிறகடிக்கும் காதல் பறவையின்
ஜோடி பறவை நான்தானோ !
ஒன்று மட்டும் நானறிவேன்
என் காதல் உன் இதயம் சேர்ந்து விட்டது ....
- கவிதை பூக்கள் பாலா
..

Wednesday, March 23, 2011

புன்னகையின் வலிமைதானோ ! ...


நீ சில்லறையாய் சிதறவிட்ட
சிரிப்பொலியை ...
சிதறாமல் சிறைபிடிக்க
கையேந்தும் என் அனிச்சை செயல் ......
உன்னிடத்தில் உறவாடும்
என் காதல் தான் காரணமோ ......

கட்டி அனைத்து தழுவவில்லை
காதல் ரசம் பேசவில்லை
முத்தம் கூட முயன்றதில்லை
உன்பின்னே அலைந்ததில்லை
உன் வாசம் தேடி வந்ததில்லை
இருந்தும் உன் காதல் எப்படி ......

என்னை கடக்கையிலே
இதழ்யோரம் நீ வடித்த
புன்னகையின் வலிமைதானோ !
பெண்மைகள் சுற்றி பலரிருந்தாலும்
உன்னை மட்டும் சுருட்டி வைத்த
என் விழி தானோ ....
உன் காந்த விழிக்கு ஏற்ற
இழு விசையும் நான் தானோ !

இறுகிய என் இதய கதவும் ........
இன்று மண்ணில் குழைத்து
நீ செய்யும் வடிவம் தானோ ! என் நிலை ...
மாற்றங்கள் வந்ததடி என்னுள்ளே
உன் புன்னகையின் வலிமையாலே ........
கவிதை பூக்கள் பாலா

Wednesday, March 16, 2011

அவன் களவானி பயல் தானே !


சிறு வயது சாபங்கள் .....
சிலநேரங்களில் பலித்து விடும் போல ,
ஆம் , அறியாத வயதினிலே ,
அறிந்து செய்த சிறு சிறு திருட்டு தனம்
சாபத்தை பெற்று தந்தது ,
களவானி பயலுக்கு வாக்கப்பட போறே என்று !,
விளையாட்டாய் சிரிந்து மகிழ்ந்த நான் ,
இன்றும் அதே புன்னகையில் .....
சாபம் பலித்து விட்டதே என்று .......
இதய பெட்டகத்தில் பாதுகாத்த என் காதலை ,
களவாடி இதயத்தில் பதுக்கிக்கொண்டான்
என்னவன், அவன் களவானி பயல் தானே !
- கவிதை பூக்கள் பாலா
..

Saturday, March 5, 2011

காதல் நம் காதல் ஆகும்...


என் கண்ணுக்குள் வாழ்பவள் நீ
கவிதையில் கலந்திருப்பவள் நீ
உணர்வில் உறைந்திருப்பவலும் நீ
என்னில் நிறைதிருப்பவள் நீ
என் வாழ்வில் வசந்தமும் நீ
உன் காதல் விடை சொல்லும்
என் வாழ்வும் நீ என்று ..........
உன் காதல் வரம் வேண்டி தவமிருக்கும் என் காதல்
பதில் கொடு காதல் நம் காதல் ஆகும் .......
- கவிதை பூக்கள் பாலா ..