Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label மழைத்துளி. Show all posts
Showing posts with label மழைத்துளி. Show all posts
Friday, December 25, 2015
Saturday, November 1, 2014
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
விடாத மழையிலும்,
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
என்னை தொடவிடாமல் துரத்தும்
உன் கெஞ்சும் (கொஞ்சும் ) விழிகளின்
பயணம் என் பரிசத்தை நோக்கி அல்லவா ?
நினைவுகளை மூழ்கடிக்கும்
உன் விரல் நுனிகள்
வட்டமிடும் வியர்வைக் கோலங்கள்
அணைப்பின் அன்பில்
ஆர்பரிக்கும் துடித்துடிப்புகள் .....
நெற்றியில் சொட்டும் நீர்த்துளியில்
குற்றால குதுகுலம் ...
சுற்றம் மறந்து கட்டியனைத்தோம்
சாலையோர மரக்குடையின் கீழ்...........
- கவிதை பூக்கள் பாலா
Friday, December 24, 2010
மழைத்துளி

நானும் ஒரு மனித இனமே !
வெண்மேகம் கன்னி பெண்ணாக
வானவெளியில் வலம்வந்தேன் ,
கதிரவன் காமத்தில் கருவுற்று கார்மேகமானேன் ,
காற்றின் மருத்துவத்தால் மழைத்துளியை பெற்றெடுத்தேன் ,
மகிழ்ச்சியை கொண்டாட,
உறவுகள் வானவேடிக்கை நடத்துது
பல கல்வி பயிலவே பூமிக்கு பயணப்பட்டேன் ,
இன்னல்களை கடந்தேதான் பூமிக்குள சென்றடைந்தேன்
சென்றடைந்த இடத்தை வைத்து,
மனித இனங்கள் எங்களையும் தரம் பிரித்தனர் ,
புனித தீர்த்தமாய் தலை சுமந்தவருமுண்டு ,
சாக்கடையாய் முகம் சுளிந்தவரும் உண்டு ,
கதிரவன் வந்து சூடான முத்தமிட்டு
ஆவியாய் அலைய விட்டான் வான்வெளியில்
மண்ணுலகில் மறித்து போனேன் ..............
- பாலா
Subscribe to:
Posts (Atom)


