என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label கேள்வி கவிதைகள். Show all posts
Showing posts with label கேள்வி கவிதைகள். Show all posts

Wednesday, February 2, 2011

கொலை பொருள் அறியவே அவா..





















முச்சந்தியில நிக்கவச்சி ,
கழுத்துக்கு கலர் கலரா மலையெல்லாம் போட்ட மனிதா !
கவுரவமுன்னு பதிலுக்கு தலையாட்டி நின்னபோது ,
என் தலை மட்டும் தரையில தனியா !
ஒன்று மட்டுமே புரியவில்லை ,
என் முச்சந்தி கொலை எதற்கு ?
என் தவறால் யார் கற்பும் பறிபோனதோ !,
இல்லை கொலை குற்றம் செய்தேனோ !,
கொள்ளை கொள்ளையாய் அடித்தேனோ !
தீர்ப்பு எழுதாமலே கொடும் தண்டனையா ?
சாவிற்கு பயப்படேன் மனிதா !
கொலையின் பொருள் அறியவே அவா !!
சாமிக்கு பலியிட்ட ஆட்டின் ஆன்மா !
-- கவிதை பூக்கள் பாலா .

குறிப்பு : இதே மாதிரிதான் சில மனிதனின் ஆன்மாவிற்கும் சந்தேகம் கொலைபொருள் விளங்காமலே இன்றைய நிலையில் மாண்டு போகின்றது தீவிரவாதம் என்ற பெயராலே .....
...