என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Monday, January 31, 2011

நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........



















டற்கரை
ஓரம் எங்க வீடு ,
கடலுக்குள்ளே எங்க வாழ்வு ,
கட்டுமரம் எங்க வாழ்வோடு ,
நித்தம் கடலில துடுப்போடு ,
கடலுக்குள்ளே எங்க சோறு ,
கரைச் சேர்த்ததான்
வாழும் சான் வயிறு ,

டலில தெரியல எல்லை கோடு
காற்று அடிப்பதில் தெரியுதா? அண்டைநாடு,
உயிருக்கு பயந்தே படகுல பயணம் ,
சிங்களவன் காளானா வருவத நினைத்து ,
மனிதத்த தின்னும் சிங்கள பேய்கள் ,
நித்தம் பசிக்கு தின்ன தமிழன் உயிரா !

ரையில உயிர்கள் சொந்தத்த எதிர்ப்பார்க்குது ,
கொடுமையின் அழுக்குரல்கள் கரையேறி சாகுது ,
நடுக்கடலில மிதக்கும் எங்களின் தீரம் ,இப்ப
கரைதட்டி போனதே சிங்கள நாய்களின் வெறியலே!
வழிப்பறி செய்யுது சிங்கள கடற்படை கடலிலே !
பிழைக்க வழியேது தெரியாம துடிக்குது மீனவ குடும்பமே !
விஷத்த கக்கி ஈழத் தமிழன கொன்ன சிங்கள் பாம்பு ,
நாக்க நீட்டி தமிழக மீனவன கொன்னு நோட்டம் போடுது .

மிழினம் காப்போம் தாளுல மின்னுது ,
தரம்கெட்ட தமிழக அரசியல் சவக்குழிய தேடுது ,
வோட்டுக்கு மட்டுமே தமிழக மீனவன், அவன்
சடலத்தைக் காட்டி வோட்டு வேட்டையும் நடக்குது ! ,
உறவுகளை இழந்த உணர்வற்ற தமிழகம்,
இன்னமும் முழிக்கல டாஸ்மார்க் மயக்கத்துல,
உணர்வுகள் தள்ளாடுது மானாட மயிலாட ,
இலவசங்கள் பல்லிளிக்குது பிணத்துக்கு வாய்கரிசி போட.

த்தியில சீட்டு இல்லைன்னா தன் சீட்டுதான் தங்கள ,
நடவண்டிய தள்ளிகிட்டு டெல்லியில பிசைஎடுக்க பறக்குது ,
தமிழன் பிணவாடை அடிச்சாலும் , மூர்ச்சையாகி நின்னாலும்,
விதவிதமா அறிக்கை விட்டே தினம் ஆளத்தான் கொல்லுது .
தமிழா! நீ முழிக்கலன்னா மண்ணோடு மண்ணாயிடுவ ,
நீ வாழ்ந்த தடங்கூட தெரியாம போயிடுவ ..........
- கண்டன குரலோடு கவிதை பூக்கள் பாலா

கண்ணீர் பெருகும் மீனவன் பாடல் :


.... கண்டிப்பாக வீடியோவை ஒருமுறையாவது பார்க்கவும்...
...