என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts
Showing posts with label நட்பு கவிதைகள். Show all posts

Tuesday, November 11, 2014

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........

சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?....
--------------------------------------------------------
ஆயிரம் உறவுகள் உண்டிங்கே சுற்றி
அதில் அர்த்தம் பொதிந்தவை எத்தனை
என்றெண்ணி வடிக்கும் நோக்கில்
சிந்தனை சிக்கி
சிலந்தி கூட்டினுள் நானானேன்

ஒவ்வொன்றும் தனித்திசைகள்
தனக்கொன்று கோட்பாடுகள்
பார்வைகள் பலாயிரம்
பறக்கும் வலிமைகள் பலவாரு
விரும்பியனைத்தாள் விருப்பமாவோம்
வெட்டி எறிந்தால் விலகி நிற்போம்
உண்மையென்றால் உருகிப்போவோம்
உணர்வுயென்ரால் உயிராயிருப்போம்
உருகுலைத்தால் உதாசினமாக்குவோம்
நடிபென்றால் நாகரீகமாய் நகர்வோம்
நாடிப்பிடித்து, ரத்தசோதனை நடத்தி
இனமொழியளர்ந்து சுயநலம் சீர்தூக்கி
சுதந்திரமற்று சுற்றம் எதற்கு ?.........
- கவிதை பூக்கள் பாலா

Thursday, February 3, 2011

உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !














நட்புக்கு
பொருள் விளங்க நாம் இருவர் ,
என்றேதான் சொல்லி வந்த உறவுக் கூட்டம்,
எதற்கு இந்த நட்பு இப்போ,
விட்டு தொலையேன் உறவுகள் சாடல் .

வாழ்க்கை சக்கரத்தை திருப்பி சுற்றி
கண்ணயர்ந்த வேளையிலே
நம் நட்பு பாதை திரைப் படமாய்,
நினைவுத் திரையில் ,
நொறுக்கு தீனி , விளையாட்டு மட்டுமே
பெரிதாய் தெரிந்த பள்ளிப் பருவம்.
நான் வரவில்லை என்றால் ரிக்சாவில்
கூட அமர மறுத்த நல்ல தோழனாய் ,
என் காச்சலுக்காக நொறுக்கு தீனியை
மறந்து உபவாசம் இருந்த உற்றதோழனாய் ,
நம் நட்பை கண்டு உள்ளம் பூரித்த,
நம் உறவு கூட்டம் .

வீட்டில் அடம் பிடித்து ,
சேர்ந்தெழுதிய நுழைவு தேர்வு ,
என் மதிப்பெண்ணுக்கும் நீ ஒருவனாய்
செலுத்திய கடவுள் நேர்த்திகடன்.
உறவுகளின் சிறு சந்தேக கண்ணோடே
கடந்து சென்ற நம் கல்லூரி வாழ்க்கை ...

இன்ப துன்பம் சேர்ந்தே இருந்த
நம் நட்பின் ஊடே ,
சிறு சலனமும் கண்டதில்லை
இதுநாள் வரையில் ...
நம் நட்பின் எல்லை நாமறிவோம்
வாலிப கண்ணியம் காத்தே .....
நல் வாழ்க்கை துணையோடு, நாம்
பயணிக்கின்றோம் இல்வாழ்க்கை பயணம் ,

கண்ணில் சுடுநீர் கசிய
நீ சொல்லிய வார்த்தை(வாழ்க்கை) யதார்த்தம் ...
"உன்னவனுக்கு உன்மீது நம்பிக்கை அதிகம்,
அதனால் என்மீது வருத்தம் .
என்னவளுக்கு என்மீது காதல் அதிகம் ,
அதனால் உன் மீது வருத்தம் (கோவம்) .
நம் நட்பிக்கு நம்மீது நம்பிக்கை அதிகம்
அதனால் நம் நட்பை குறைத்து கொள்ளலாம் .
உன்வாழ்க்கை நலமாய் இருக்கும் ."
என்னை உருக்குலைத்த வார்த்தைகள் தோழா !

இப்போதும் நம் நட்பே வென்றதடா என் தோழா !
என்வாழ்க்கை நலமாய் இருக்கும் என்றாயே !
நட்பு ,
நட்பை வாழவைத்தே
வாழ்ந்துகொண்டிருக்கும்.......
மேலும் உயர்ந்தே நிற்கின்றாய் என் தோழா !

- கவிதை பூக்கள் பாலா
...