என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label காதல் தோல்வி கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் தோல்வி கவிதைகள். Show all posts

Saturday, January 3, 2015

என்னுள் துளிர்க்க வா :-



விழிகளின் ஓரம் ஈரம்,
உன் நினைவுகள் தரும் பாரம்,
கனவுகளைத் தொடும் மாற்றம்,
தரும் வலிகளில் இதய போராட்டம்.....



நினைவுகள் கெக்கிலிட்டவித்துக்களாய்
பிழிந்து விழிகளில் கசியுதடி....
மழைத்துளி மண்தொட்ட மாற்றமாய்
மனம் கலங்கித்தான் போகுதடி......

ன் ஒளித்தந்த நிலைக்கண்ணாடி
பிம்ப நிழலுமற்றுப்போனதடி....
உன் உருவான தலையணையும்
எனை தவிக்கத்தான் வைக்குதடி...

ன்னுள் அன்பின் நீரூற்றாய்
இதயம் நிறைக்க வா...
வீழ்ந்திட்ட உணர்வு விதையை
விருச்சமாக என்னுள் துளிர்க்க வா....
- கவிதை பூக்கள் பாலா

Wednesday, November 26, 2014

தொடர்ந்திடுமா வாழ்க்கை இனி......:



இதயம் துடிக்கின்றது,
உடலும் நடிக்கின்றது,
பொய்யுடல் இதுவென்றரியாமலே.


மருத்துவங்கள் ஓதுகின்றது,
தோழமைகள் கருணை
மழைபொழிகின்றது,
உறவுகள் உருகிப்போகிறது
பொய்யுடல் இதுவென்றரியாமல்..


நெடுவானம் நிர்மூலம்,
கதிரவனும் கருகிபோய்,
தென்றல் பேயிரச்சல் புயலாய்,
பூக்களும் கொடுவாளோடு,
கண்ணீர் கடலை மிஞ்சி,
வார்த்தைகள் அர்ஜுனன்
போர்க்கோல காண்டீபமாய்,
என் இதயம் சல்லடையாய்.

கனிவில்ல காதலாம் என்காதல்
உணர்வில்லா போனதாம் உயிர்க்காதல்,
காதல் அகராதியறியாமல் பிதற்றகள்,
முடிவு செய்துவிட்டு முகவரிதேடுதல்
பிரிவின் ஓர் இலக்கனமோ.

பறிக்கொடுத்த இதயத்தை
பிரபஞ்சத்தில் எங்கு தேடுவேன்
கருனையற்று நீ அறுத்தெறிந்த
காதலைக் கொன்று
நடைப்பிணமாய் அலையவிட்டு
ஆனந்தம்கொண்டாயடி.

வாழ்வுமுடியவில்லை நானறிவேன்,
வாழ்கையாதென்று தெரியேன்இனி
பயணம் முடியும் மட்டும் தொடருகின்றேன்.
துணையாய் அவள் நினைவுகள்
வழியாய் அவள் வசவுகள்....
தொடர்ந்திடுமா வாழ்க்கைஇனி......

- கவிதை பூக்கள் பாலா

Friday, October 24, 2014

அலைகளாய் போனது !

அலைகளை ரசிக்கவே வந்தேன் - ஆனால்
அலைகளாய் போனது என் உள்ளுணர்வு

- கவிதை பூக்கள் பாலா

வெறுமையை தந்ததேன் !

வெளிச்சமாக வந்த உறவு - இன்று
வெறுமையை தந்ததேன் !
உரிமையாய் இருந்த உன் உறவு
உணர்வற்று போனதேனே !

- கவிதை பூக்கள் பாலா

நினைவிலும் மறக்க முடியாமலே !

உணர்வுகள் இன்னும் இருக்குதடி,
இதயமும் நித்தம் துடிக்குதடி - அதில்
உயிராய் போனது  உன் காதலடி,
இன்று கனவாய் போன உன் காதலை
இருக்கும் இடமறியா தேடுதடி,
நினைவிலும் மறக்க முடியாமலே !

- கவிதை பூக்கள் பாலா




களைப்பே இல்லாமல் கொல்லுதடி !

கனமான உன் நினைவுகள் ,
கடக்க இயலா இரவுகள் ,
கடினமான உன் வார்த்தைகள்,
களைப்பே இல்லாமல் கொல்லுதடி !
-
கவிதை பூக்கள் பாலா

Thursday, August 28, 2014

உன்னை சபிக்கிறேனடா

கல்நெஞ்சனும் கரைதிடுவன் என் நிலை அறிந்தால் !
அப்படிஎன்றால் ,  
நீ அரக்கனோ அல்ல அதனிலும் கொடியவனோ !
இந்நிலையிலும் உன்முகம் தேடி என் விழிகள் !
என்னை தவறாக நினைத்தாயட ,
உன்  காதலையும் கொன்றாயட !
ஒரு நொடியில்..
என்னை அமிலத்தால் சிதைத்து !
உன் காதலுக்கு நான் எப்படி பெறுபாவேன் !
உன் மனதை அல்லவா கொன்றிருக்கவேண்டும் !
என்னை புரியாத ..
நீ  எப்படி என் காதலனாவாய் !
நே கொன்றது என்னை மட்டும் அல்ல ..
என் உறவுகளை ,
என் உணர்வுகளை ,
என் புறதோற்றதை,
என் கனவுகளை ,
என் வாழ்கையை,
தினம் கொல்கிறது ...
என் மனம் என் நிலையை எண்ணி
உன் தவறுக்கு என்னை காரணமாகிய
உன்னை சபிக்கிறேனடா !!
உன் தலைமுறை உன்னோடு மாண்டு போகட்டும் ...
 - கவிதைபூக்கள் பாலா

Monday, March 4, 2013

வெடித்திடுமோ இதயம் !


என்றும் நானிருப்பேன் உன்னுடனே !
என்னுரும்,வாழ்வும்  நீதானே !
 என்றவள், இன்று   !
அவன் தான் என் காதலன் ,
என்னை தாங்க பிறந்தவனும், 
என்னுரிரும், சந்தோசமும்  அவன்தானே !
என்றேதான் என்னிடம் வினவுகிறவளே !
என்னை கொன்றுவிட்டு போ,
என் அன்பை , உணர்வை கொன்றுவிடதே !
இது கொடுமையன்றோ என்னவளே !
இதற்கு வெட்டி கூரிட்டிருகலாம் என் இதயத்தை !
நீ செய்யா விட்டாலும் உன் வார்த்தைகள்
அதை முடிதிடுகின்றது தினம் தினம் ,
 இரும்பால் அரண்  அமைத்தாலும்
வெடித்து  சிதரிடுமோ என் இதயம்  ..........

 -கவிதை பூக்கள் பாலா 




Tuesday, January 10, 2012

இது காதலின் தோல்வி அல்ல


ண்மை காதலில்
உறைந்திருப்பது அன்பு எனும் பொதுபண்பே !
ஆனால்  காதலில் அன்பு மிகுந்திருப்பது
மிகுந்த  சுயநலத்தோடு  ஒரேஇடமே!

சொந்த பந்தம் தெரிவதில்லை ,
உற்ற நட்பும் உறைப்பதில்லை ,
சுற்றம் முற்றும்  புரிவதில்லை ,
நினைவுகள் அற்று நடைபிணமாய் ,
நாதியற்று அனாதையாய் மாறுவதையும்
மறந்தேதான் தவிக்கின்றது .

வேற்று நினைவுகள் வருவதில்லை ,
ஒற்றை நினைவு  மனதில் குடிபுகுந்து
வீட்டுக்குள்ளே அனாதையாய்
 விலக்கி  வைக்கும் காதலே !

ரு நொடியும் ஒரு யுகமாய் ,
ஒரு பொழுதும் ஒரு ஜென்மாய்
புலம்ப வைக்கும் காதலே !
தெளிவில்லா போதை மயக்கத்திலே
சுற்றித்திரியும் காதலே
சுடு சொல்லையும் சுகமாய் சுமக்கும்
வடுக்களையும் பரிசாய் நினைக்கும் காதலே !

காதல் பொய்த்து போனாலே
கடைசி யாத்திரையையும்  சுகமக்குதே காதலே !
கடமையை மறக்குது காதலே
கவிதை படிக்குது காதலே
மனதில் துக்கம் சுமக்கும் காதலே !
இருந்தும் வாழ்த்தும் உண்மை காதலே!
உருகுலைத்தே போகவைக்கும் காதலே
ஆனால் நலமாய் வாழ்வும் ,
வாழ்த்தும் உண்மை காதலே !

து காதலின்  தோல்வி அல்ல ,
இருவர்  உறவின்  தோல்வி .
தெரிந்தும் யாரும் விடுவதுமில்லை
காதல் யாரையும் விட்டு வைப்பதுமில்லை.

- கவிதை பூக்கள் பாலா

Tuesday, December 13, 2011

மறக்க நினைத்தே நினைக்கிறேன்.....


உன்னை மறக்க
வார்த்தையாய் வெளிகொணர்ந்து
கவிதையாக்கினேன்
என் கவிதையிலும்
மெல்ல சிரித்து
என்னை கொல்கிறாய் ............

Saturday, September 24, 2011

காதல் அழிவதில்லை

காதல் அழிவதில்லை ,
ஆம் காதல்  அழிக்க படுகின்றது ,
காதலி சலிச்சி போனா,
காதலன் கல்லாகி போனா !
பெத்தவங்க கண்கலங்கி  போனா !
உயிரை விடுவேன் மிரட்டும் போதும் !
உண்மை காதல் மறையும்  போதும் !
காதல் அழிக்க படுகின்றது ........
- கவிதை  பூக்கள்  பாலா  

Monday, December 6, 2010

யாருக்கும் தெரியாமல் .........


உன்பெயரையே வைத்துவிட்டேன்
காதலனே ! என் குழந்தைக்கு ...- நான்
உனை கொஞ்சவும் முடியும்
நெஞ்சினில் சுமக்கவும் முடியும்
யாருக்கும் தெரியாமல் ........ - பாலா