Pages
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts
Friday, December 25, 2015
மஞ்சள் பூசுது வானம்..
முடிந்து போகும் இரவும்,
மலரபோகும் விடியலும்,
சந்திக்கும்போது மயங்கிடுமோ
வெட்கி சிவந்து மஞ்சள் பூசுது வானம்..
மலரபோகும் விடியலும்,
சந்திக்கும்போது மயங்கிடுமோ
வெட்கி சிவந்து மஞ்சள் பூசுது வானம்..
வாழ்வின் சுவாரசியம்
எதிர்பார்க்கா நிகழ்வு எதிர்பாராமல் நடப்பதும்,
எதிர்பார்க்கும் தருணம் நிகழாமலும் போவதே ,
மனித வாழ்வின் சுவாரசியம்...
எதிர்பார்க்கும் தருணம் நிகழாமலும் போவதே ,
மனித வாழ்வின் சுவாரசியம்...
இதுவே மனித வாழ்க்கை..
காற்றிலே கலந்துவிட்ட உயிரும் உடலும் ,
நேற்றுவரை மனிதனாக உருவகம்,
இன்று உடல்மட்டுமே பிணமென்ற பெயரோடு,
இனி நினைவுகளில் மட்டுமே ....
இதுவே மனித வாழ்க்கை.
நேற்றுவரை மனிதனாக உருவகம்,
இன்று உடல்மட்டுமே பிணமென்ற பெயரோடு,
இனி நினைவுகளில் மட்டுமே ....
இதுவே மனித வாழ்க்கை.
மனிதன் பயணம் :
எப்படியோ எப்பொழுதோ இழந்திட்ட உணர்வுகள்
தனக்குள்ளே புதைத்தே தான் கடக்கின்றோம்
விளைவாய் விபரீதமாய் மன உலைச்சல்கள்,
வடிந்திடும் கனவுகள், உலவிடும் நினைவுகள்,
அசைத்துப்போடும் உணர்வுகள் தான் மனிதன்,
பயணிக்கு வாழ்க்கையில் சிலபிடிப்புகள் சில்லிடும்,
சிறகடிக்கும் மனது மீண்டும் பிறக்கும் மனிதனாய்,
மனம் மலர்ந்திடும் மகிழ்வாய் மாற்றிடும் கடமைகளை,
தொலைந்த மகிழ்வு தொடங்கிடும் கடமையோடு..
வாழ்க்கை மகிழ்வுக்கு பல பயணங்களாய் தொடரும்,
மனிதன் பயணம் ஒரு சுழச்சியே...
தனக்குள்ளே புதைத்தே தான் கடக்கின்றோம்
விளைவாய் விபரீதமாய் மன உலைச்சல்கள்,
வடிந்திடும் கனவுகள், உலவிடும் நினைவுகள்,
அசைத்துப்போடும் உணர்வுகள் தான் மனிதன்,
பயணிக்கு வாழ்க்கையில் சிலபிடிப்புகள் சில்லிடும்,
சிறகடிக்கும் மனது மீண்டும் பிறக்கும் மனிதனாய்,
மனம் மலர்ந்திடும் மகிழ்வாய் மாற்றிடும் கடமைகளை,
தொலைந்த மகிழ்வு தொடங்கிடும் கடமையோடு..
வாழ்க்கை மகிழ்வுக்கு பல பயணங்களாய் தொடரும்,
மனிதன் பயணம் ஒரு சுழச்சியே...
அடைமழை
அடைமழையில் ஆனந்தமானது,
சோம்பல் முறிக்கும் உடல்
மெத்தையில் சுகம்காணுது
ஓடாமல் ஓய்வுக்கொள்ளுது,
ஜன்னலோர மழைசாரல் கவிதையாகுது,
சூடான தேனீரும் செர்க்கமாகிறது,
சூரியனின்றி நேரம் கடிகாரமானது,
காலநேரங்கள் காலம்கடத்துது....
சோம்பல் முறிக்கும் உடல்
மெத்தையில் சுகம்காணுது
ஓடாமல் ஓய்வுக்கொள்ளுது,
ஜன்னலோர மழைசாரல் கவிதையாகுது,
சூடான தேனீரும் செர்க்கமாகிறது,
சூரியனின்றி நேரம் கடிகாரமானது,
காலநேரங்கள் காலம்கடத்துது....
Friday, December 24, 2010
மழைத்துளி

நானும் ஒரு மனித இனமே !
வெண்மேகம் கன்னி பெண்ணாக
வானவெளியில் வலம்வந்தேன் ,
கதிரவன் காமத்தில் கருவுற்று கார்மேகமானேன் ,
காற்றின் மருத்துவத்தால் மழைத்துளியை பெற்றெடுத்தேன் ,
மகிழ்ச்சியை கொண்டாட,
உறவுகள் வானவேடிக்கை நடத்துது
பல கல்வி பயிலவே பூமிக்கு பயணப்பட்டேன் ,
இன்னல்களை கடந்தேதான் பூமிக்குள சென்றடைந்தேன்
சென்றடைந்த இடத்தை வைத்து,
மனித இனங்கள் எங்களையும் தரம் பிரித்தனர் ,
புனித தீர்த்தமாய் தலை சுமந்தவருமுண்டு ,
சாக்கடையாய் முகம் சுளிந்தவரும் உண்டு ,
கதிரவன் வந்து சூடான முத்தமிட்டு
ஆவியாய் அலைய விட்டான் வான்வெளியில்
மண்ணுலகில் மறித்து போனேன் ..............
- பாலா
Monday, December 13, 2010
வற்றிய குளம்
Sunday, December 12, 2010
முத்தம்
Subscribe to:
Posts (Atom)





