என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....
Showing posts with label தங்கை. Show all posts
Showing posts with label தங்கை. Show all posts

Tuesday, May 31, 2011

என்றும் மாறா உறவானவளோ .....


தங்கை அவள்,
என்றும் அண்ணன் மடியினில் தவழ்ந்திடும் மழலையோ !
பல மாற்றங்கள் அவள் வாழ்வில் கண்டாலும்,
மாறாத உறவின் பாலம் ஆனவளோ !
தங்கை எனும் வார்த்தையிலே ,
உயிர் தாங்கி நிற்கும் உன்னத உறவானவளோ !.
கொடிய கண்களையும் தட்டி வைக்கும்,
நம்பிக்கையின் எல்லை கோடானவளோ .......
உள்நாட்டு பேரினை போல்,
என்றும் முடிவில்லா (செல்ல) சண்டை இடுபவளோ !.
அடுத்தவன் சாடினாலே - அண்ணனின்
போர்ப்படை தளபதியாய் தங்கை மாறிடுபவளோ ! ,
மிட்டாய்க்கு சண்டையிட்டு - பின்
விரல் பிடித்து பள்ளிசென்ற காலமும் முதற்கொண்டே ,
உற்றதோழியும் அவளே !, உயரிய பாசமும் அவளே !
அடுத்த தெருவில் காதல் அம்பை எய்த அண்ணனையும்,
தனை நோக்கிடும் அம்புகளை ஒடித்திடும் வீரனாகியவளோ ! .
கரம் பிடித்து கொடுப்பவனை , கால் தொட்டு வரவேற்றிடும்
மனவலிமை கொடுத்திடும் பாசத்தின் முழுமையானவளே !
அண்ணன் இல்லத்தரசியை இணைபதிளும் முதன்மையானவளோ !
தான் ஈன்ற குழந்தைக்கு உலகில் - அண்ணனை
முதன்மை உரிமை உறவாக மாமனாகி மகிழ்ந்தவளோ !
ஒரு வயிற்றில் மலர்ந்து இருமலராக வாழ்ந்தாலும்,
மனதில் காதலாய் இன்னொருவன் இருந்தாலும்,
என்றும் உன்னதமாய் இதயத்தில் ஓர் உறவாய் வைத்தவளோ !
வாழ்விழந்து போனாலோ ,
கொண்டவன் கொடுங்கோலனாய் மாறினாலோ ,
என்றும் காக்கும் துணையாய் அண்ணனை நினைபவளோ !
உலகில் பயணம் முடிந்து போகும் வேளையும்,
அண்ணன் பட்டுடுத்தி அழகா பவனி செல்பவளோ !
மலர்ந்த நாள் முதல் அண்ணன் தோல்சுற்றி
வலம்வந்து உலகில் என்றும் மாறா உறவானவளோ !
(அண்ணன்)தங்கை .............

அண்ணன் தங்கை பாச உணர்வுக்கு
என் இந்த கவிதையை
பரிசாக கொடுக்க விரும்புகிறேன் ..........

கவிதை பூக்கள் பாலா....