என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !

என் தமிழ் பேசும் நெஞ்சங்களே !
. நண்பர்களே என் எண்ண பகிர்வில் குற்றம், குறைகள், பாராட்டுகள், விமர்சனங்களை பதிவு செய்யவும் .
- உங்கள் நண்பன் பாலா ....

Friday, December 25, 2015

இதமாகுமடி....

குடைக்குள் இழுத்தாய்,
கருணையா காதலா ?..
மழைத்தூரல் அழகடி,
நனைந்திடவும் ஆசையடி,
உணர்வுகளை மறைத்தே
பொய்யுரைத்தேன் நானடி..
மூச்சுக்காற்றும் தனலானதடி ,
தொண்டைகுழியும் விக்குதடி,
இடைத்தீண்டல் இம்சையடி,
முத்தமிடதுடிக்குதடி,
வார்த்தைகள் ஒலியிழந்ததடி,
சிறுதீண்டலும் சிதைமூட்டுதடி,
உச்சந்தலை வெடிக்குதடி,
உன்மழை ஓவியம் கிறக்குதடி,
காமம் கட்டுக்குள்இல்லையடி,
விழிமோதும் நொடிப்பொழுதில்
மின்னலும் தோற்க்குமடி...
ஏன் இந்த கொடுமையடி,
தவிர்க்கவிரும்பா தவிப்படி...
விரல்தீண்டலில் முகம்பார்கிறாய்,
சிறுபுன்னகையில் புரிவேனடி,
மழைசாரல் இதமாகுமடி....

- கவிதை பூக்கள் பாலா

No comments:

Post a Comment